ஜி.டி.பி., வளர்ச்சி, 5.8 சதவீதமாக சரிவுஜி.டி.பி., வளர்ச்சி, 5.8 சதவீதமாக சரிவு ...  இந்தியாவிற்கான சலுகையை பறித்தது, அமெரிக்கா:முன்னுரிமை வர்த்தக நாடு அந்தஸ்தை நீக்கினார் டிரம்ப் இந்தியாவிற்கான சலுகையை பறித்தது, அமெரிக்கா:முன்னுரிமை வர்த்தக நாடு ... ...
வர்த்தகம் » ஜவுளி
மெக்சிகோ--- – அமெரிக்கா விரிசல்: திருப்பூருக்கு வருமா வாய்ப்பு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2019
23:37

திருப்பூர்:சீனாவை தொடர்ந்து, மெக்சிகோ –- அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவிலும் விரிசல் விழத் துவங்கியுள்ளது. இது, இந்திய ஆயத்த ஆடை உற்பத்தி துறைக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளுக்கிடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. இதை பயன்படுத்தி, மெக்சிகோ, அதிகளவு ஆயத்த ஆடைகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்க ஆடை இறக்குமதியில், மெக்சிகோ எட்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவின் மொத்த ஜீன்ஸ் இறக்குமதியில், மெக்சிகோவின் பங்களிப்பு, 35 சதவீதம்.


தற்போது, அமெரிக்கா -– மெக்சிகோ இடையிலான வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மெக்சிகோவிலிருந்து, அமெரிக்காவுக்குள் கடத்தல்காரர்கள் ஊடுருவதாகவும் அதை கட்டுப் படுத்தாவிட்டால், மெக்சிகோவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, ஜூன் 10ல் இருந்து 5 சதவீதம் வரி விதிக்கப்படும். பின் அக்டோபர் 1ல் – 25 சதவீதமாக அதிகரிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.


மெக்சிகோ பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்கும்போது, அது, அமெரிக்காவுக்கான வர்த் தகத்தை மேலும் விரிவுபடுத்த, திருப்பூர் உள்ளிட்ட இந்திய ஆடை ஏற்றுமதி துறையினருக்கு வாய்ப்பாக அமையும் என கருதப்படுகிறது.


இது குறித்து திருப்பூர் பின்னாலடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:மெக்சிகோ மீது வரி விதிப்பு நடவடிக்கை எடுக்கும்போது, வர்த்தக வாய்ப்புகள் சீனாவுக்கு செல்ல வாய்ப்பில்லை.மாறாக, அமெரிக்க சந்தையில், திருப்பூருக்கு உகந்த சூழல் உருவாகும். அமெரிக்காவின் ஆடை இறக்குமதியில், இந்தியா நான்காமிடத்தில் உள்ளது. வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)