பதிவு செய்த நாள்
01 ஜூன்2019
23:37
திருப்பூர்:சீனாவை தொடர்ந்து, மெக்சிகோ –- அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவிலும் விரிசல் விழத் துவங்கியுள்ளது. இது, இந்திய ஆயத்த ஆடை உற்பத்தி துறைக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளுக்கிடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. இதை பயன்படுத்தி, மெக்சிகோ, அதிகளவு ஆயத்த ஆடைகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்க ஆடை இறக்குமதியில், மெக்சிகோ எட்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவின் மொத்த ஜீன்ஸ் இறக்குமதியில், மெக்சிகோவின் பங்களிப்பு, 35 சதவீதம்.
தற்போது, அமெரிக்கா -– மெக்சிகோ இடையிலான வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மெக்சிகோவிலிருந்து, அமெரிக்காவுக்குள் கடத்தல்காரர்கள் ஊடுருவதாகவும் அதை கட்டுப் படுத்தாவிட்டால், மெக்சிகோவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, ஜூன் 10ல் இருந்து 5 சதவீதம் வரி விதிக்கப்படும். பின் அக்டோபர் 1ல் – 25 சதவீதமாக அதிகரிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
மெக்சிகோ பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்கும்போது, அது, அமெரிக்காவுக்கான வர்த் தகத்தை மேலும் விரிவுபடுத்த, திருப்பூர் உள்ளிட்ட இந்திய ஆடை ஏற்றுமதி துறையினருக்கு வாய்ப்பாக அமையும் என கருதப்படுகிறது.
இது குறித்து திருப்பூர் பின்னாலடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:மெக்சிகோ மீது வரி விதிப்பு நடவடிக்கை எடுக்கும்போது, வர்த்தக வாய்ப்புகள் சீனாவுக்கு செல்ல வாய்ப்பில்லை.மாறாக, அமெரிக்க சந்தையில், திருப்பூருக்கு உகந்த சூழல் உருவாகும். அமெரிக்காவின் ஆடை இறக்குமதியில், இந்தியா நான்காமிடத்தில் உள்ளது. வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|