பதிவு செய்த நாள்
03 ஜூன்2019
00:24
பங்குச்சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகளில் எதை நாடுவது சரியாக இருக்கும்? என்ற தயக்கமும், குழப்பமும் பல முதலீட்டாளர்களுக்கு இருக்கலாம்.
இந்த குழப்பத்திற்கு விடை காண உதவும் அம்சங்கள்:
முதலீடு
நோக்கில் இரண்டாவது வீடு வாங்குவதாக இருந்து, அதை வங்கி கடனில்
வாங்குவதாக இருந்தால், வீடு மூலம் கிடைக்க கூடிய வருமானத்தை விட,
கடனுக்கான வட்டி
அதிகமாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் போது, அதை நிர்வகிப்பதற்கான நேரம் இருக்கிறதா என, பார்க்க வேண்டும்.
குறிப்பாக தொலைதுார இடத்தில் வாங்கும் போது, இதை யோசிக்க வேண்டும்.மேலும், வீட்டு வாடகை ஒப்பந்தம் தொடர்பான சட்ட சிக்கல் ஏற்பட்டால், சமாளிக்கும் திறன் உள்ளதா என்றும் யோசிக்க வேண்டும்.பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக இருந்தால், தொழில்முறை வல்லுனர்களின் ஆலோசனை பெறுவதற்கான நேரமும், வசதியும் இருக்கிறதா என கேட்டுக்கொள்ள வேண்டும்.
பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கம் பாதிப்பை ஏற்படுத்தலாம்என்பதால்,
இதை தாங்கி கொண்டு முதலீட்டை தொடரும் திறன் இருப்பதையும் உறுதி
செய்து கொள்ள வேண்டும். நீண்ட கால நோக்கிலான முதலீடு முக்கியம்
என்பதை உணர வேண்டும்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|