பதிவு செய்த நாள்
03 ஜூன்2019
00:26
தேவைப்படும்
நேரத்தில் பணம் எடுக்க, ஏ.டி.எம்., இயந்திரங்கள் வசதியாக
இருப்பதோடு, பல்வேறு வகையான அடிப்படை வங்கி சேவைகளை நிறைவேற்றவும்
கைகொடுக்கின்றன. ஏ.டி.எம்., பயன்பாடு வசதியாக அமைந்தாலும்,
ஏ.டி.எம்., சார்ந்த மோசடி அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பான
ஏ.டி.எம்., பயன்பாட்டிற்கான வழிகள் இதோ:
வீடியோ கேமரா வசதி:
ஏ.டி.எம்., மையங்கள் அமைந்திருக்கும் இடங்களில் வீடியோ கேமரா பதிவு
இருக்க வேண்டும். மையத்தில் ஒன்றும், இயந்திரத்தில் ஒன்றும் என
இரண்டு கேமராக்கள் இருப்பது வழக்கம். குற்றவாளிகள், கேமரா இல்லாத மையங்களை குறி வைப்பதால், நீங்கள் பயன்படுத்தும் மையத்தில் கேமரா கண்காணிப்பு இருக்கிறதா என, முதலில் கவனிக்கவும்.
கைவரிசை அறிகுறிகள்: ஏ.டி.எம்., கார்டை நுழைக்கும் முன், இயந்திரத்தில், கார்ட் ரீடர், பின் அட்டை அல்லது டிஸ்பிளேவை சுற்றி கோடுகள் இருந்தால் அல்லது பின் பேட் விசைகள் சிக்கியிருந்தால் அல்லது டேப் போன்றவை ஒட்டிக்கொண்டிருந்தால் விஷமிகள், தகவல்களை திருட முயன்றிருக்கலாம், என பொருள்.
ஏ.டி.எம்.,
வளாகம்: ஏ.டி.எம்., வளாகம் அமைந்திருக்கும் இடத்தையும் கவனத்தில்
கொள்ளவும். அந்த வளாகத்தில் சந்தேகத்திற்குரிய நபர்கள்
யாரேனும் தென்பட்டால், வேறு ஒரு மையத்தை நாடலாம். இரவு நேரத்தில்
செல்வதாக இருந்தால், மையத்தில் நல்ல ஒளி வசதி இருப்பதை உறுதி செய்து
கொள்ளவும். சுற்றுப்புறத்தில் கணகாணிப்பு கேமரா இருந்தால் இன்னும்
நல்லது.
பின் எண் பயன்பாடு: ஏ.டி.எம்., கார்டை இயக்க ’பின்’ எண் எனப்படும் ரகசிய எண் அவசியம். இந்த எண்ணை எக்காரணம் கொண்டும், துண்டுச்சீட்டில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டாம். இந்த சீட்டை, கார்டுடன் வைத்திருப்பது இன்னும் மோசம். இந்த எண்ணை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்.
உதவி வேண்டாம்: பணம் எடுப்பதற்கு முன், யாரேனும் அருகில் உள்ளனரா அல்லது பின் தொடர்ந்து வந்துள்ளனரா என, சோதிக்கவும். கார்டை இயக்க, பணம் எடுக்க, அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து உதவி கேட்க வேண்டாம். பரிவர்த்தனையில், ஏதேனும் சிக்கல் என்றால் பதற்றம் அடையாமல் செயல்படவும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|