பதிவு செய்த நாள்
04 ஜூன்2019
00:23
சென்னை:‘‘டி.வி.எஸ்., ஆட்டோமொபைல் நிறுவனத்தின் வருவாயை, இரண்டு ஆண்டுகளில், இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது,’’ என, இந்நிறுவனத்தின் இயக்குனர், ஆர்.தினேஷ் தெரிவித்தார்.
டி.வி.எஸ்., ஆட்டோமொபைல் சொலுசன் நிறுவனமும், ஜப்பானின் மிட்சுபிசி கார்ப்பரேசன் நிறுவனமும், தங்களது வணிகத்தை விரிவுபடுத்த, கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இது குறித்து, டி.வி.எஸ்., ஆட்டோமொபைல் நிறுவனத்தின் இயக்குனர், ஆர்.தினேஷ் மற்றும் மிட்சு பிசி கார்ப்பரேஷன் நிறுவனத்தின், மூத்த துணை தலைவர், எஸ்.வகபயஷி ஆகியோர் நேற்று கூறியதாவது:டி.வி.எஸ்., ஆட்டோமொபைல் சொலுசன் நிறுவனமும், ஜப்பானின் மிட்சுபிசி கார்ப்பரேஷன் நிறுவனமும், தங்களது வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக ஒன்றிணைந்து உள்ளன.
இதற்காக, மிட்சுபிசி நிறுவனம், டி.வி.எஸ்., நிறுவனத்தில், 250 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது. மேலும், இந்தியாவை கடந்து, ஆப்பிரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில், டி.வி.எஸ்., தனது வணிகத்தை, மிட்சுபிசி வாயிலாக விரிவுபடுத்த உள்ளது.இதனால், அடுத்து இரண்டு ஆண்டுகளில், தற்போதைய வருவாயை, இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளோம். டி.வி.எஸ்., ஆட்டோமொபைல் சொலுசனின், 2018 – 19ம் நிதியாண்டு வருவாய், 1,300 கோடி ரூபாயாக உள்ளது. இது நடப்பு நிதியாண்டில், 1,800 ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|