ஓராண்டில் வரி ஏய்ப்பு 426 கோடி ரூபாய்ஓராண்டில் வரி ஏய்ப்பு 426 கோடி ரூபாய் ...  நம்பிக்கைக்கு உகந்த பிராண்டுகள் நம்பிக்கைக்கு உகந்த பிராண்டுகள் ...
தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி அதிகரிப்பு:தேவை, ஏற்றுமதி, ‘ஆர்டரால்’ முன்னேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2019
00:26

புதுடில்லி:கடந்த மே மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சியில், நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக, ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.தேவை அதிகரிப்பும், அதன் காரணமாக, துறைகளில் வேலை வாய்ப்புகள் உயர்ந்ததும் இந்த முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த, ’ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின், மே மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தாண்டு, மே மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, 'பி.எம்.ஐ.,' குறியீடு, 52.7 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, ஏப்ரலில் 51.8 புள்ளிகளாக இருந்தது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். மே மாதத்தில், இக்குறியீடு, 52.7 புள்ளிகளுக்கு உயர்ந்ததன் மூலம், வலுவான முன்னேன்றத்தை உணர்த்தியுள்ளது.கடந்த, 22 மாதங்களாக தொடர்ந்து, பி.எம்.ஐ., குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேலாக இருந்து வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
புதிய ஆர்டர்கள் கிடைத்ததன் காரணமாக, சற்றே தொய்வாக இருந்த நிலை, விரைவாக மாற்றம் கண்டுள்ளது. மேலும், புதிய ஆர்டகள் உற்பத்தியாளர்களுக்கு கிடைத்த காரணத்தினால், வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.வரும் ஆண்டிலும் உற்பத்தி அதிகரிக்கும் என்ற கண்ணோட்டத்தில், இந்திய உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள். ஏப்ரல் மாதத்திலிருந்தே வளர்ச்சி கண்டுவருவதால், இந்த நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அரசின் கொள்கைகள், சந்தையில் எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகள் ஆகியவை பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை உற்பத்தியாளர்களிடம் ஏற்படுத்தி உள்ளது.கடந்த, 14 ஆண்டு காலத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகளை பார்க்கும்போது, சற்று பின்தங்கிய வளர்ச்சியே காணப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளோடு ஒப்பிடும்போது, இந்த மே மாதத்தில் உற்பத்தி, ஆர்டர்கள் ஆகியவற்றில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வரும், 6ம் தேதி அன்று, ரிசர்வ் வங்கியின், நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், வரி விகிதம் குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்த வரி விகிதம் துறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.தயாரிப்பு துறை நிறுவனங்கள், சிறந்த உற்பத்தி திறனில் இயங்கி வருகின்றன. புதிய ஆர்டர்கள் கிடைத்ததால் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. பொருட்களின் வினியோகமும், சிறப்பாக நடைபெற்றுள்ளது.பாலியானா டி லிமா, தலைமை பொருளாதார வல்லுனர், ஐ.எச்.எஸ்., மார்கிட்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)