பதிவு செய்த நாள்
04 ஜூன்2019
00:26
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சியில், நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக, ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.தேவை அதிகரிப்பும், அதன் காரணமாக, துறைகளில் வேலை வாய்ப்புகள் உயர்ந்ததும் இந்த முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த, ’ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின், மே மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தாண்டு, மே மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, 'பி.எம்.ஐ.,' குறியீடு, 52.7 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, ஏப்ரலில் 51.8 புள்ளிகளாக இருந்தது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். மே மாதத்தில், இக்குறியீடு, 52.7 புள்ளிகளுக்கு உயர்ந்ததன் மூலம், வலுவான முன்னேன்றத்தை உணர்த்தியுள்ளது.கடந்த, 22 மாதங்களாக தொடர்ந்து, பி.எம்.ஐ., குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேலாக இருந்து வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
புதிய ஆர்டர்கள் கிடைத்ததன் காரணமாக, சற்றே தொய்வாக இருந்த நிலை, விரைவாக மாற்றம் கண்டுள்ளது. மேலும், புதிய ஆர்டகள் உற்பத்தியாளர்களுக்கு கிடைத்த காரணத்தினால், வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.வரும் ஆண்டிலும் உற்பத்தி அதிகரிக்கும் என்ற கண்ணோட்டத்தில், இந்திய உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள். ஏப்ரல் மாதத்திலிருந்தே வளர்ச்சி கண்டுவருவதால், இந்த நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அரசின் கொள்கைகள், சந்தையில் எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகள் ஆகியவை பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை உற்பத்தியாளர்களிடம் ஏற்படுத்தி உள்ளது.கடந்த, 14 ஆண்டு காலத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகளை பார்க்கும்போது, சற்று பின்தங்கிய வளர்ச்சியே காணப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளோடு ஒப்பிடும்போது, இந்த மே மாதத்தில் உற்பத்தி, ஆர்டர்கள் ஆகியவற்றில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வரும், 6ம் தேதி அன்று, ரிசர்வ் வங்கியின், நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், வரி விகிதம் குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்த வரி விகிதம் துறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.தயாரிப்பு துறை நிறுவனங்கள், சிறந்த உற்பத்தி திறனில் இயங்கி வருகின்றன. புதிய ஆர்டர்கள் கிடைத்ததால் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. பொருட்களின் வினியோகமும், சிறப்பாக நடைபெற்றுள்ளது.பாலியானா டி லிமா, தலைமை பொருளாதார வல்லுனர், ஐ.எச்.எஸ்., மார்கிட்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|