பதிவு செய்த நாள்
04 ஜூன்2019
10:53
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று புதிய உச்சத்தை தொட்டு வர்த்தகத்தை நிறைவு செய்த நிலையில் இன்று(ஜூன் 4) சரிவை சந்தித்தன. வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 15 புள்ளிகளும், நிப்டி 10 புள்ளிகளும் சரிந்த நிலையில் காலை 10.45 மணியளவில் சென்செக்ஸ் 90.98 புள்ளிகள் சரிந்து 40,176.64ஆகவும், நிப்டி 36.45 புள்ளிகள் சரிந்து 12,052ஆகவும் வர்த்தகமாகின.
ரிசர்வ் வங்கியின் நிதி நிலை கூட்டம் தொடர்பான எதிர்பார்ப்பு இருந்தாலும், உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவு காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் சரிந்தன.
ரூபாயின் மதிப்பு ஏற்றம்
பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்தபோதும் ரூபாயின் மதிப்பு ஏற்றத்துடன் காணப்படுகிறது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் சரிந்து ரூ.69ஆக வர்த்தகமானது. இருப்பினும் இந்த ஏற்றம் கொஞ்சம் கொஞ்மாக சரிவை சந்தித்து வருகிறது. காலை 10.45 மணியளவில் ரூபாயின் மதிப்பு ரூ.69.22ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|