பதிவு செய்த நாள்
04 ஜூன்2019
23:39
புதுடில்லி:பென்னா சிமென்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி, அனுமதி வழங்கி உள்ளது.
பங்கு வெளியீட்டுக்காக அனுமதி கோரி, கடந்த டிசம்பரில், செபியிடம் விண்ணப்பம் செய்திருந்தது, பென்னா சிமென்ட்.இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 1,550 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில், 1,300 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், 250 கோடி ரூபாய்க்கு நிறுவனர்களின் பங்குகளையும் வெளியிட இருக்கிறது.
திரட்டப்படும் நிதியை, கடன்களை தீர்க்கவும், பொது நிர்வாகச் செலவுக்கும் பயன்படுத்த உள்ளது.எடெல்வைஸ் பைனான்ஷியல் சர்வீசஸ், ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ், ஜே.எம்.,பைனான்ஷியல், யெஸ் செக்யூரிட்டிஸ் ஆகிய நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை நிர்வாகம் செய்கின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|