நம்பிக்கைக்கு உகந்த பிராண்டுகள் நம்பிக்கைக்கு உகந்த பிராண்டுகள் ...  பொருளாதார வளர்ச்சி  7.5 சதவீதமாக கணிப்பு உலக வங்கி ஆய்வறிக்கை வெளியீடு பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக கணிப்பு உலக வங்கி ஆய்வறிக்கை வெளியீடு ...
‘ஜிம் – 2’ நிறுவனங்களுக்காக 21 ஆயிரம் ஏக்கர் நிலம் தயார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2019
23:41

‘ஜிம் – 2’ எனும், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுக்காக, 21 ஆயிரம் ஏக்கர் நிலம் தயார் நிலையில் இருப்பதாக, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



தமிழக அரசு சார்பில், நடைபெற்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 304 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின. இதன் மூலம், 3 லட்சத்து, 431 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.சிப்காட்இந்நிலையில், மாநாட்டில் புரிந்துணர்வு செய்த நிறுவனங்கள் தொழில் துவங்க ஏதுவாக, பல ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளன.



இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், பெரு நிறுவனங்கள் தொழில் துவங்க தேவையான நிலம் உட்பட, பல்வேறு வசதிகளை, ‘சிப்காட்’ நிறுவனம் ஏற்படுத்தி தருகிறது.நிலம் வழங்க ஏதுவாக, கடந்த ஆண்டு முதலே, தமிழகம் முழுவதும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் சிப்காட் ஈடுபட்டது.கடந்த ஆகஸ்ட் வரை, 10 ஆயிரத்து, 550 ஏக்கர் நிலம் தயார் நிலையில் இருந்தது.



முதலீட்டாளர்கள் மாநாட்டில், எதிர்பார்ப்பை விட அதிகமான நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்தன.விலைஇவர்களுக்கு நிலம் வழங்க, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தருமபுரி, விருதுநகர், துாத்துக்குடி என, 18 மாவட்டங்களில், தற்போது, 21 ஆயிரம் ஏக்கர் நிலம் தயார் நிலையில் இருக்கிறது. 5 லட்சம் முதல், 1.25 கோடி ரூபாய் வரை, பகுதிக்கேற்ப, 1 ஏக்கரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



மேலும், நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. நிறுவனங்கள் தொழில் துவங்க தயாராகி விண்ணப்பிக்கும் போது, நிலம் வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)