பதிவு செய்த நாள்
04 ஜூன்2019
23:41
‘ஜிம் – 2’ எனும், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுக்காக, 21 ஆயிரம் ஏக்கர் நிலம் தயார் நிலையில் இருப்பதாக, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு சார்பில், நடைபெற்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 304 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின. இதன் மூலம், 3 லட்சத்து, 431 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.சிப்காட்இந்நிலையில், மாநாட்டில் புரிந்துணர்வு செய்த நிறுவனங்கள் தொழில் துவங்க ஏதுவாக, பல ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், பெரு நிறுவனங்கள் தொழில் துவங்க தேவையான நிலம் உட்பட, பல்வேறு வசதிகளை, ‘சிப்காட்’ நிறுவனம் ஏற்படுத்தி தருகிறது.நிலம் வழங்க ஏதுவாக, கடந்த ஆண்டு முதலே, தமிழகம் முழுவதும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் சிப்காட் ஈடுபட்டது.கடந்த ஆகஸ்ட் வரை, 10 ஆயிரத்து, 550 ஏக்கர் நிலம் தயார் நிலையில் இருந்தது.
முதலீட்டாளர்கள் மாநாட்டில், எதிர்பார்ப்பை விட அதிகமான நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்தன.விலைஇவர்களுக்கு நிலம் வழங்க, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தருமபுரி, விருதுநகர், துாத்துக்குடி என, 18 மாவட்டங்களில், தற்போது, 21 ஆயிரம் ஏக்கர் நிலம் தயார் நிலையில் இருக்கிறது. 5 லட்சம் முதல், 1.25 கோடி ரூபாய் வரை, பகுதிக்கேற்ப, 1 ஏக்கரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. நிறுவனங்கள் தொழில் துவங்க தயாராகி விண்ணப்பிக்கும் போது, நிலம் வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|