பதிவு செய்த நாள்
05 ஜூன்2019
23:30
புதுடில்லி:ஷியாம் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி அனுமதி வழங்கியுள்ளது.
ஷியாம் ஸ்டீல் நிறுவனம், புதிய பங்குகள் வெளியீட்டின் மூலம், 200 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. மேலும், பங்குதாரர்கள், நிறுவனர்கள் வசம் உள்ள, 66.70 லட்சம் பங்கு களையும் வெளியிட உள்ளது. இதில் நிறுவனர்களின், 11.60 லட்சம் பங்குகள், பங்குதாரர்களின், 55.09 லட்சம் பங்குகளும் அடக்கம்.இந்த பங்கு வெளியீட்டின் மூலம், மொத்தம், 500 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
கோல்கட்டாவைச் சேர்ந்த இந்த நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, கடன்களை திரும்ப செலுத்தவும், பொதுவான நிர்வாக செலவுகளுக்காகவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|