பதிவு செய்த நாள்
06 ஜூன்2019
11:05
மும்பை : ரம்ஜான் பண்டிகை விடுமுறைக்கு பிறகு இன்று(ஜூன் 6) துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை துவங்கின. வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 31.03 புள்ளிகள் சரிந்து 40,052.51ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 18.20 புள்ளிகள் சரிந்து 12,003.45ஆகவும் வர்த்தகமாகின.
ரிசர்வ் வங்கியின் நிதிநிலை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன் மீதான எதிர்பார்ப்பு காரணமாகவும், அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் காணப்படுகின்றன.
ரூபாயின் மதிப்பும் சரிவு
பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவுடன் காணப்படுகிறது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 காசுகள் சரிந்து ரூ.69.45ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|