பதிவு செய்த நாள்
06 ஜூன்2019
23:56
புதுடில்லி:‘விப்ரோ’ நிறுவனத்தின், நிர்வாக தலைவர் பதவியிலிருந்து, அதன் நிறுவனர், அசீம் பிரேம்ஜி ஓய்வு பெறுகிறார்.
நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று, விப்ரோ நிறுவனம். இந்நிறுவனத்தின், நிர்வாக தலைவர் பொறுப்பிலிருந்து, ஜூலை 30ல், அசீம் பிரேம்ஜி ஓய்வு பெறுகிறார்.இது குறித்து, விப்ரோ அறிவித்துள்ளதாவது:நிர்வாக தலைவர் பதவியிலிருந்து, அசீம் பிரேம்ஜி ஓய்வு பெற்றாலும், செயல்சாரா இயக்குனராக, நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் நீடிப்பார்.
அசீம் பிரேம்ஜியை அடுத்து, நிர்வாக தலைவர் பொறுப்பிற்கு, அவரது மகனும், நிர்வாகக் குழு உறுப்பினருமான, ரிஷாத் பிரேம்ஜி வருகிறார். விப்ரோ நிறுவனத்தை நிறுவியவர். 53 ஆண்டு காலம், இந்நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில், ஜூலை, 30ல் ஓய்வு பெறுகிறார்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|