ஓய்வு பெறுகிறார், ‘விப்ரோ’ பிரேம்ஜி ஓய்வு பெறுகிறார், ‘விப்ரோ’ பிரேம்ஜி ...  பட்ஜெட்டை மதிப்பிடும் சி.ஐ.ஐ., பட்ஜெட்டை மதிப்பிடும் சி.ஐ.ஐ., ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வாராக் கடன்: புதிய அறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2019
23:59

மும்பை:வாராக் கடன் தொடர்பாக திருத்தப்பட்ட, புதிய அறிக்கை, இன்னும் மூன்று, நான்கு நாட்களில் வெளியிடப்படும் என, ரிசர்வ் வங்கியின் கவர்னர், சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

கடந்த, 2018, பிப்ரவரி, 12ல், அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல், வாராக் கடன் தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிட்டார்.அதில், வசதி இருந்தும் கடனை திரும்பச் செலுத்தாத நிறுவனங்கள் மீது, வங்கிகள் கடும் நடவடிக்கை எடுக்க, வழி வகை செய்யப்பட்டிருந்தது. அதில், ஒரு நிறுவனம், கடன் தவணையை செலுத்த, ஒரு நாள் தவறினாலும், வங்கிகள், அக்கடனை, இடர்ப்பாட்டு கடன் பிரிவில் சேர்த்து, 180 நாட்களுக்குள், மறுசீரமைக்க வேண்டும்.தவறினால், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் மூலம், திவால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.



இதனால், வங்கிகள், காலதாமதமின்றி வாராக் கடனை கண்டறிந்து வசூலிக்க முடியும். திவால் நடவடிக்கைக்கு அஞ்சி, நிறுவனங்களும் கடனை திரும்பச் செலுத்தும் என, ரிசர்வ் வங்கி எதிர்பார்த்தது.ஆனால், ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்கு, வங்கிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. திவால் நடவடிக்கையில், பல தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாகக் கூறி, மத்திய அரசும், விதிமுறையை தளர்த்தக் கோரியது. அதை ஏற்க, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது.



இதையடுத்து, பல நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியின் உத்தரவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம் இறுதியில், ‘ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவு, அரசியல் சாசன சட்டத்தில், தொழில் புரிவோருக்கு வழங்கியுள்ள உரிமையை மீறுவதாக உள்ளதால், அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’ என, தெரிவித்தது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி வாராக் கடன் குறித்த அறிக்கையை திரும்பப் பெற்றது.


இந்நிலையில், புதிய அறிக்கை, இன்னும் மூன்று, நான்கு நாட்களில் வெளியிடப்படும் என, ரிசர்வ் வங்கியின் கவர்னர், சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)