பதிவு செய்த நாள்
07 ஜூன்2019
10:51
மும்பை : மூன்றாவது முறையாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததால் இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்த நிலையில் இன்றும் வர்த்தகம் சரிவை சந்தித்தன. வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 211.04 புள்ளிகள் சரிந்து 39,318.68ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 34.25 புள்ளிகள் சரிந்து 11,809.50ஆகவும் வர்த்தகமாகின. ஆனால் சிலமணிநேரங்களில் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன. காலை 10.45 மணியளவில் சென்செக்ஸ் 33.25 புள்ளிகள் உயர்ந்து 39,562.97ஆகவும், நிப்டி 2.45 புள்ளிகள் உயர்ந்து 11,846.20ஆகவும் வர்த்தகமாகின.
ரூபாயின் மதிப்பு சரிவு
இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கமான சூழல் நிலவுவது போன்று ரூபாயின் மதிப்பும் சற்று மந்தமாகவே உள்ளது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.69.22ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|