பதிவு செய்த நாள்
07 ஜூன்2019
23:28
மும்பை:வாராக் கடன் வசூல் தொடர்பாக, புதிய நெறிமுறையை, ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது. அதில், இதற்கு முன், கடன் தவணையை ஒருநாள் செலுத்த தவறினாலும், வங்கிகள், அக்கடனை, இடர்ப்பாட்டு கடன் பிரிவில் சேர்க்க உத்தரவிட்டிருந்ததை மாற்றி, 30 நாட்களாக திருத்தியமைத்துள்ளது.
மேலும், புதிய நெறிமுறையில், இதற்கு முன்பிருந்த அனைத்து தீர்மானங்களையும் முற்றிலும் மாற்றி அமைத்து உள்ளது, ரிசர்வ் வங்கி.வாராக் கடன் தொடர்பாக திருத்தப்பட்ட, புதிய அறிக்கை, இன்னும் மூன்று, நான்கு நாட்களில் வெளியிடப்படும் என, ரிசர்வ் வங்கியின் கவர்னர், சக்திகாந்த தாஸ், 6ம் தேதியன்று அறிவித்திருந்தார்.இந்நிலையில், நேற்று இந்த அறிவிப்பை, ரிசர்வ் வங்கி வெளியிட்டது.கடந்த, 2018, பிப்ரவரியில், வாராக்கடன் குறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|