பதிவு செய்த நாள்
09 ஜூன்2019
02:56
புதுடில்லி:கடந்த நிதியாண்டின், நான்காவது காலாண்டில், ரெப்கோ ஹோம் பைனான்ஸ்
நிறுவனம், 51.5 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த, 2018 - -19 நிதியாண்டின், நான்காவது காலாண்டில், நிறுவனம், 51.5 கோடி ரூபாய், நிகர லாபத்தை ஈட்டி யுள்ளது. இது, அதற்கு முந்தைய நிதியாண்டின், இதே காலாண்டில் ஈட்டிய லாபத்துடன் ஒப்பிடுகையில், 58 சதவீதம் அதிகமாகும்.இக்காலாண்டில், நிறுவனத்தின் கடன் அனுமதி அளவு, 972.8 கோடி ரூபாயாகவும், விநியோக அளவு, 878.1 கோடி ரூபாயாகவும் இருந்தது.
நிகர வட்டி வருவாய், 3 சதவீதம் அதிகரித்து, 116.3 கோடியாக உயர்ந்துள்ளது.மொத்த வாராக் கடன் விகிதம்,3.9 சதவீதத்திலிருந்து, 2.95 சதவீதமாக குறைந்துள்ளது.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|