பதிவு செய்த நாள்
09 ஜூன்2019
23:49
இளைய தலைமுறையினர் மத்தியில், குறிப்பாக இளம் பெண்கள் மத்தியில் கடன் வசதியை நாடுவது அதிகரித்து இருப்பதாக, பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெண்கள் அதிக அளவில் கடன் வசதியை நாடுவதை, குறிப்பாக இளைய தலைமுறை பெண்கள் மத்தியில் இந்த போக்கு அதிகமாக இருப்பதாக, இணையம் மூலம் கடன் வழங்கும், கேஷ்.இ., நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது.
டிரான்ஸ் யூனியன் சிபில் நடத்திய ஆய்வு, 2015 முதல், 2018 வரை, கடனுக்கான பெண் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை, 48 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கிறது.பெண்கள் கடன் பெறும் போது, ஆண்களை விட அதிக தொகையை பெறுவதாக ஜெஸ்ட்மணி ஆய்வு தெரிவிக்கிறது. பெண்கள் சராசரியாக வாங்கும் கடன், ஆண்கள் வாங்கும் கடன் தொகையை விட, 35 சதவீதம் அதிகமாக உள்ளது.
இளம் தலைமுறையினர் வாழ்வியல் தேவைக்காக கடன் வாங்க முற்படுவது மற்றும் இணையம் மூலம் கடன் பெறும் வசதி உள்ளிட்டவை இதற்கு காரணமாக கருதப்படுகிறது.
பெண்கள் நிதி சுதந்திரம் பெற்று வருவதும், குடும்ப செலவுக்கு பங்களிப்பு செலுத்துவதும், மற்றொரு முக்கிய காரணமாக அமைகிறது. கடன் பெறுவதில், பெண்களுக்கு வங்கிகள் அளிக்கும் சலுகைகளும், இந்த போக்கிற்கு வலு சேர்த்து உள்ளதாக கருதப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|