பதிவு செய்த நாள்
09 ஜூன்2019
23:58
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண், ‘நிப்டி’ கடந்த வாரம் ஆரம்ப நாட்களில் உயர்ந்து வர்த்தகமாகி, 12 ஆயிரத்து, 100 புள்ளிகளைத் தாண்டி, புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது. இருப்பினும், வார இறுதி நாட்களில், சரிவுடன் வர்த்தகம் ஆகி, 300 புள்ளிகள் சரிந்து, வர்த்தகம் முடிவுற்றது.
கடந்த வாரம் புதன் கிழமை, சந்தைகளுக்கு விடுமுறை. வியாழனன்று சந்தைகள் ஆரம்பித்தபோது, சரிவிலிருந்து வர்த்தகமாகி வந்தது. அன்று நடைபெற்ற, இந்திய ரிசர்வ் வங்கியின்,
நிதிக் கொள்கை குறித்த கூட்டத்தில், வட்டி விகிதம், 0.25 விகிதம் குறைக்கப்பட்டது.
வார இறுதி நாள் வெள்ளியன்று, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், 478 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர். மாறாக, உள்நாட்டு முதலீட்டாளர்கள், 179 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை கொள்முதல் செய்தனர்.இருப்பினும், கடந்த இரு மாதங்களில் அன்னிய முதலீட்டாளர்கள், லோக்சபா தேர்தலின் முடிவில் நிலையான அரசு அமையும் என்ற எதிர்பார்ப்பில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகளவிலான பங்குகளை கொள்முதல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நிறுவனங்கள், தங்களுடைய பங்குகளை அடமானம் வைத்து, சந்தையில் நிதி திரட்டும்
போக்கு உள்ளது. இதில், முன்னணி நிறுவனங்கள், தங்களது நிறுவனப் பங்குகளை, அதிக அளவில் அடமானம் வைத்தனர்.இதன் காரணமாக ஏற்பட்ட சஞ்சலம் மற்றும் அசாதாரண சூழல் காரணமாகவும், சந்தையில் பங்குகள் விலை சரிய, ஒரு காரணமாக அமைந்தது.
மேலும், வங்கி சாரா நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள குழப்பம் மற்றும் நிறுவனங்களின் நிதி அறிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாகவும், சந்தையில் பங்குகள் விலை சரிந்தன.
கடந்த வார ஆரம்பத்தில், ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் பாதிப்புடனே, இந்திய பங்குச் சந்தைகள் வர்த்தகமாகி வந்தன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெளியான தொழில் துறை வளர்ச்சி குறியீடு, எதிர்பார்த்ததை விட குறைந்து வந்தது. இதன் காரணமாக, பொருளாதார வளர்ச்சி மந்தமாகும் சூழல் போக்கு நிலவியதால், சந்தைகள் சரிந்து வர்த்தகம் ஆகின.
உலக வங்கியின் கணிப்புப்படி, 2017ம் ஆண்டில், இந்திய பொருளாதாரம், 2.6 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள். தற்போது அதைக் கடந்து, உலகளவில் ஆறாவது மிகப்பெரிய பொருளாதாரமாக ஆகியுள்ளது.நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல், ஜூலை மாதம் வரையிலான இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை, 1.4 பில்லியன் டாலர்.டாலருக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு, 13 சதவீதம் குறைந்துள்ளது. ஆசிய நாணயங்களில், அதிகப்படியான மதிப்பு சரிந்தது இந்திய ரூபாய் ஆகும். பிற நாடுகளின் நாணயத்தின் மதிப்பு, குறைந்த அளவிலேயே சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முருகேஷ் குமார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|