முதல் முறை ஊதி­யம் பெறு­ப­வர்­கள் செய்ய வேண்­டிய நிதி செயல்­கள்முதல் முறை ஊதி­யம் பெறு­ப­வர்­கள் செய்ய வேண்­டிய நிதி செயல்­கள் ... பட்ஜெட்டில் விடை கிடைக்குமா? பட்ஜெட்டில் விடை கிடைக்குமா? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2019
23:58

தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண், ‘நிப்டி’ கடந்த வாரம் ஆரம்ப நாட்­களில் உயர்ந்து வர்த்­த­க­மாகி, 12 ஆயிரத்து, 100 புள்­ளி­க­ளைத் தாண்டி, புதிய வர­லாற்று உச்­சத்தை எட்­டி­யது. இருப்­பி­னும், வார இறுதி நாட்­களில், சரி­வு­டன் வர்த்­த­கம் ஆகி, 300 புள்­ளி­கள் சரிந்து, வர்த்­த­கம் முடி­வுற்­றது.


கடந்த வாரம் புதன் கிழமை, சந்­தை­க­ளுக்கு விடு­முறை. வியா­ழ­னன்று சந்­தை­கள் ஆரம்­பித்­த­போது, சரி­வி­லி­ருந்து வர்த்­த­க­மாகி வந்­தது. அன்று நடை­பெற்ற, இந்­திய ரிசர்வ் வங்­கி­யின்,
நிதிக் கொள்கை குறித்த கூட்­டத்­தில், வட்டி விகி­தம், 0.25 விகி­தம் குறைக்­கப்­பட்­டது.


வார இறுதி நாள் வெள்­ளி­யன்று, வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள், 478 கோடி ரூபாய் மதிப்­பி­லான பங்­கு­களை விற்­பனை செய்­த­னர். மாறாக, உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள், 179 கோடி ரூபாய் மதிப்­பி­லான பங்­கு­களை கொள்­மு­தல் செய்­த­னர்.இருப்­பி­னும், கடந்த இரு மாதங்­களில் அன்­னிய முத­லீட்­டா­ளர்­கள், லோக்­சபா தேர்­த­லின் முடி­வில் நிலை­யான அரசு அமை­யும் என்ற எதிர்­பார்ப்­பில், முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வுக்கு அதி­க­ள­வி­லான பங்­கு­களை கொள்­மு­தல் செய்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

நிறு­வ­னங்­கள், தங்­க­ளு­டைய பங்­கு­களை அட­மா­னம் வைத்து, சந்­தை­யில் நிதி திரட்­டும்
போக்கு உள்­ளது. இதில், முன்­னணி நிறு­வ­னங்­கள், தங்­க­ளது நிறு­வ­னப் பங்­கு­களை, அதிக அள­வில் அட­மா­னம் வைத்­த­னர்.இதன் கார­ண­மாக ஏற்­பட்ட சஞ்­ச­லம் மற்­றும் அசா­தா­ரண சூழல் கார­ண­மா­க­வும், சந்­தை­யில் பங்­கு­கள் விலை சரிய, ஒரு கார­ண­மாக அமைந்­தது.
மேலும், வங்கி சாரா நிறு­வ­னங்­களில் ஏற்­பட்­டுள்ள குழப்­பம் மற்­றும் நிறு­வ­னங்­களின் நிதி அறிக்­கை­களில் ஏற்­பட்­டுள்ள மாற்­றங்­கள் கார­ண­மா­க­வும், சந்­தை­யில் பங்­கு­கள் விலை சரிந்­தன.

கடந்த வார ஆரம்­பத்­தில், ஆசிய மற்­றும் ஐரோப்­பிய சந்­தை­களில் ஏற்­பட்ட சரி­வின் பாதிப்­பு­டனே, இந்­திய பங்­குச் சந்­தை­கள் வர்த்­த­க­மாகி வந்­தன. அமெ­ரிக்கா மற்­றும் ஐரோப்­பிய நாடு­களில் வெளி­யான தொழில் துறை வளர்ச்சி குறி­யீடு, எதிர்­பார்த்­ததை விட குறைந்து வந்­தது. இதன் கார­ண­மாக, பொரு­ளா­தார வளர்ச்சி மந்­த­மா­கும் சூழல் போக்கு நில­வி­ய­தால், சந்­தை­கள் சரிந்து வர்த்­த­கம் ஆகின.


உலக வங்­கி­யின் கணிப்­புப்­படி, 2017ம் ஆண்­டில், இந்­திய பொரு­ளா­தா­ரம், 2.6 லட்­சம் கோடி அமெ­ரிக்க டாலர்­கள். தற்­போது அதைக் கடந்து, உல­க­ள­வில் ஆறா­வது மிகப்­பெ­ரிய பொரு­ளா­தா­ர­மாக ஆகி­யுள்­ளது.நடப்பு நிதி­யாண்­டில் ஏப்­ரல் முதல், ஜூலை மாதம் வரை­யி­லான இந்­தி­யா­வின் நிதிப் பற்­றாக்­குறை, 1.4 பில்­லி­யன் டாலர்.டால­ருக்கு நிக­ரான, இந்­திய ரூபா­யின் மதிப்பு, 13 சத­வீ­தம் குறைந்­துள்­ளது. ஆசிய நாண­யங்­களில், அதி­கப்­ப­டி­யான மதிப்பு சரிந்­தது இந்­திய ரூபாய் ஆகும். பிற நாடு­களின் நாண­யத்­தின் மதிப்பு, குறைந்த அள­வி­லேயே சரிந்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.


முருகேஷ் குமார்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)