பதிவு செய்த நாள்
10 ஜூன்2019
00:10
கமாடிட்டி சந்தை கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை, சர்வதேச சந்தையில், முந்தைய இரு வாரங்களாக சரிவில் வர்த்தகமாகியது. கடந்த வார ஆரம்ப நாட்களில், விலை சரிந்து, 1 பேரல், 50 அமெரிக்க டாலரை எட்டியது.வார இறுதி நாட்களான, வியாழன் மற்றும் வெள்ளியில், விலையேற்றம் காணப்பட்டு, வார முடிவில், 1 பேரல், 54 அமெரிக்க டாலர் என்ற நிலையில் வர்த்தகம் முடிவுற்றது.
உலகின், இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நாடான, சவுதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி கூட்டமைப்பான, ‘ஒபெக்’ இணைந்து, கடந்த ஆண்டு டிசம்பரில், தினசரி எண்ணெய் உற்பத்தி குறைப்பு நடவடிக்கையை எடுத்தன.
இந்த உற்பத்தி குறைப்பு முடிவு, இம்மாத ஜூன் இறுதியில் காலாவதி ஆக உள்ளது. இந்நிலையில், இம்மாத இறுதியில் நடைபெற உள்ள கூட்டத்தில், உற்பத்தி குறைப்பு நடவடிக்கையை மீண்டும் நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக, அறிவிப்பு வெளியானது.
பொதுவாகவே, விலையில் கடுமையான சரிவு வரும்போது, உற்பத்தி நாடுகள், விலை சரிவை கட்டுக்குள் கொண்டு வரவும், அந்நாட்டு சுத்திகரிப்பு நிறுவனங்களை நஷ்டத்திலிருந்து காக்கவும், அவர்களது உற்பத்தியை குறைப்பர். இதனால், சந்தையில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, விலையேற்றத்தை உறுதி செய்ய திட்டமிடும்.
இதன்படி, ஜூன் மாதத்திற்கு பின், உற்பத்தி குறைப்பு நடவடிக்கை தொடரும் என்ற கருத்து வெளியாகி, அதன் காரணமாக, வார இறுதி நாளில், 4 சதவீதத்துக்கு மேல் விலை உயர்வு நிகழ்ந்தது.ஈரான் மற்றும் வெனிசுலா நாடுகள் மீது, அமெரிக்கா கொண்டு வந்துள்ள பொருளாதார தடை காரணமாக, கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், லிபிய நாட்டின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும், சந்தையில் எண்ணெய் தட்டுப்பாடு நிலவும் என்ற அச்சத்தில், விலை உயர்ந்து, வர்த்தகமாகி வருகிறது. வெனிசுலா நாட்டின் தினசரி உற்பத்தி, 2.7 லட்சம் பேரல்கள் குறைந்து, மார்ச்
மாதத்தில், மொத்த தினசரி உற்பத்தி, 7.32 லட்சம் பேரல்கள் ஆக இருந்தது.
மேலும், ஈரான் நாட்டின் உற்பத்தி, 27 லட்சம் பேரல்கள் என்ற நிலையில் உள்ளது.அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மோதல் குறித்து, இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. மேலும், இரு நாட்டு தலைவர்களும் நேரில் பேச்சு நடத்த உள்ளனர். இந்த பேச்சில் சுமுகமான உடன்பாடு ஏற்படும் என்றும், பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், தொழிற்சாலை தேவை மற்றும் கச்சா எண்ணெய் தேவை உயரும் என்ற கருத்தும், விலை உயர்வுக்கு காரணமாக அமைந்தது.
தங்கம் வெள்ளி
உலகளவில், தங்கம் மற்றும் வெள்ளி விலை, கடந்த இரு வாரங்களாக, உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த வாரம், 1 அவுன்ஸ் தங்கம், 1,500 அமெரிக்க டாலர்களை தாண்டி வர்த்தகமாகிறது.அமெரிக்காவில், புதிதாக பணியில் அமர்த்தப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்து, மாதம் ஒரு முறை, அறிக்கை வெளிவரும்.
இந்த அறிக்கை, கடந்தவியாழன் அன்று வெளியானது.இதில், கடந்த மே மாதத்தில், அதற்கு முந்தையஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, மிகக்குறைவாகவே இருந்ததாக அறிவிக்கப்பட்டது.இதனால், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிமந்தமாக உள்ளது என்ற கருத்தாலும், வரும்காலங்களில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்ற கருத்து காரணமாகவும், தங்கம் விலை அதிகரித்தது.
அமெரிக்க நாணயத்தின் மதிப்பு சரிவு காரணமாகவும் தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் உயர ஆரம்பித்தது. கடந்த இரு வாரங்களில் மட்டும், 1 அவுன்ஸ் தங்கம், 60
அமெரிக்க டாலர் வரை அதிகரித்தது.அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே
நடக்கும் வர்த்தக மோதல் காரணமாக, இரு நாடுகளின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் வளர்ச்சிகுறையும் என்ற கணிப்பால், தங்கத்தின் மீதானமுதலீட்டு ஆர்வம், முதலீட்டாளர்களிடையேஅதிகரித்தது. இதுவும், சந்தையில், தங்கத்தின் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக அமைந்தது.
வட்டி விகிதம் உயர்த்தப்படும் சூழலில், அரசு சார்ந்த கருவூலங்களில் ஆதாயம் உயரும் என்ற காரணத்தால், பொதுவாகவே முதலீட்டாளர்கள் தங்கம் மீதான முதலீட்டை குறைத்து, அரசு கருவூலங்களில் அதிக முதலீடு செய்வது வழக்கமாகும். எனவே தான், வட்டி விகிதம் உயர்த்தப்படும் போது, தங்கத்தை நல்ல முதலீட்டு பொருளாக கருதி, சர்வதேச அளவில்,
முதலீட்டாளர்கள், அதில் முதலீடு செய்கின்றனர்.
வட்டி விகிதமும், தங்கம் விலையும் எதிர்மறையான போக்கை கொண்டவை. வட்டி விகிதம் உயர்த்தப்படும் போது, தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் குறைந்து, அரசு சார்ந்த முதலீடுகளில் அதிகமாக முதலீடு செய்வர் முதலீட்டாளர்கள்.அதேபோல, வட்டி விகிதம் குறையும் போது, தங்கம் மீதான முதலீடு அதிகரிக்கும். 2004ல் அமெரிக்காவின் வட்டி விகிதம், 5.5 சதவீதமாக இருந்தது.
அப்போது, 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை, 280 அமெரிக்க டாலராக இருந்தது. பின்னர் படிப்படியாக வட்டி விகிதம் குறைக்கப்பட்டு, 0.25 சதவீதம் வரை எட்டியது.அப்போது தங்கத்தின் விலை, 1 அவுன்ஸ், 1,920அமெரிக்க டாலரை எட்டியது.தற்போது வட்டி விகிதம், 2.5 சதவீதமாக உள்ளது.
பன்னாட்டு நிதியம், உலக பொருளாதாரம், நடப்பு ஆண்டில், முந்தைய, 3.5 சதவீதத்திலிருந்து குறைந்து, 3.3 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்தது. மேலும், அமெரிக்க பொருளாதார வளர்ச்சி, 2.5 சதவீதத்திலிருந்து, 2.3 சதவீதமாக இருக்கும் என்றும் அறிவித்தது.இந்த அறிவிப்புக்குப் பின், பொருளாதார வளர்ச்சி குறையும் என்ற கோணத்தில், முதலீட்டாளர்கள், தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீட்டை அதிகரித்தனர். இதன் காரணமாக, வார இறுதி நாளில் விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களிலும், தங்கத்தின் விலைக்கு சாதகமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செம்பு
செம்பு விலையானது, தொடர்ந்து ஆறு வாரங்களாக சரிந்து, வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்க நாணயத்தின் மதிப்பு உயர்ந்தது, இதற்கு முக்கிய காரணம்.மேலும், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மோதல் காரணமாக, ஏற்றுமதி பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இதனால், தொழிற்சாலை கனிமங்களான, செம்பு, இரும்பு, துத்தநாகம், கார்பன் போன்ற, அனைத்து தொழிற்சாலை மூலதனப் பொருட்களின் விலைகளும் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன.
லண்டன் பொருள் வணிக சந்தையில், தொழிற்சாலைகளின் குறியீட்டு எண், 2015ம் ஆண்டுக்குப் பின், முதன்முறையாக, 3 சதவீதத்துக்கு மேல் சரிவு கண்டது குறிப்பிடத்தக்கது. உலகில், அதிக அளவில் செம்பு உலோகத்தை தொழிற்சாலைக்கு பயன்படுத்தும் நாடு, சீனா.
அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்வைத்தே, கமாடிட்டி பொருட்களின் விலை மதிப்பு, நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போதைய சூழலில், நாட்டின், ஜி.டி.பி., வளர்ச்சி குறையும் என்ற அச்சம் காரணமாக, விலை சரிந்து வருவது குறிப்பிடத் தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|