பதிவு செய்த நாள்
10 ஜூன்2019
00:12
வட்டி விகிதம் குறைய துவங்கியிருப்பது, பல்வேறு வகையான, ‘டெப்ட் பண்ட்’ ரக மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் மீது தாக்கம் செலுத்தும்.
ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை, தொடர்ந்து மூன்றாவது முறையாக, 25 அடிப்படை
புள்ளிகள் குறைத்துள்ளது. இதன் காரணமாக, ரெப்போ விகிதம், 2010ம் ஆண்டுக்கு பின், முதல்
முறையாக, 6 சதவீதத்திற்கு குறைவாக அமைந்துள்ளது.
வளர்ச்சி விகிதம் குறித்த கவலை நிலவும் சூழலில், வட்டி குறைப்பு மற்றும் பணமாக்கும் தன்மையை ஊக்கம் அளிக்கும் அம்சங்களாக கருதி, ரிசர்வ் வங்கி செயல்பட்டு
உள்ளதாக கருதப்படுகிறது. மேலும், ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு, குறைந்த வட்டி சூழல் தொடரும் என்பதையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது.
வட்டி விகிதம்
ரெப்போ வகிதம் குறைக்கப்பட்டிருப்பது, வீட்டுக்கடன் வட்டி விகிதம், டெபாசிட் வட்டி விகிதம் உள்ளிட்டவற்றில் தாக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, டெப்ட் பண்ட் எனப்படும் கடன் சார் மியூச்சுவல் பண்ட் திட்டங்களிலும் தாக்கம் செலுத்தும் எனக் கருதப்படுகிறது.
பல வகையான டெப்ட் பண்ட் திட்டங்கள் மீது, அவற்றின் முதலீட்டு நோக்கத்திற்கு ஏற்ப
வட்டி குறைப்பின் தாக்கம் அமையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வட்டி குறைப்பு காரணமாக,
பத்திரங்கள் அளிக்கும் பலன் குறைந்து, அவற்றில் முதலீடு செய்துள்ள, டெப்ட் பண்ட் பலன் மீது தாக்கம் செலுத்தும். எனினும், எல்லா வகையான டெப்ட் பண்ட் மீதான தாக்கமும், ஒரே விதமாக அமைய வாய்ப்பில்லை.
கூப்பன்கள் மீதான வருமானம் மீது பிரதானமாக வருவாய் ஈட்டும் நிதிகள், அதன் காரணமாக குறைந்த வருவாய் ஈட்டும் நிலை உருவாகும். ஓவர்நைட் பண்ட் மற்றும் லிக்விட் பண்ட்கள் இந்த பிரிவில் வருகின்றன. இவை குறைந்த கால முதலீட்டு சாதனங்களில் முதலீடு செய்கின்றன.பத்திரங்கள் அளிக்கும் வருமானம் மற்றும் அவற்றின் மதிப்பு உயர்வு மீதான பலன், இரண்டையும் சார்ந்திருக்கும் நிதிகளும் இருக்கின்றன. வட்டி விகிதம் குறையும் சூழலில்,
அதிக வட்டி பலன் கொண்ட பத்திரங்களின் மதிப்பு உயரும்.
இத்தகைய பத்திரங்களை கொண்டிருக்கும், நிதிகள் அவற்றின் மதிப்பு உயர்வதால் பலன் பெறும். பத்திரத்தின் காலம் நீண்டதாக இருப்பதற்கு ஏற்ப, வட்டி விகித மாற்றம் காரணமாக, அதன் மதிப்பின் மீதான தாக்கமும் அமையும். கில்ட் பண்ட் போன்றவை இந்த பிரிவில்
வருகின்றன.இந்த சூழ்நிலையில், முதலீட்டாளர்கள், அதிக பலன் பெறக்கூடிய நிதிகளுக்கு மாற வேண்டுமா? எனும் கேள்வி இயல்பாக எழுந்தாலும், இதற்கான பதில் அவர்கள் நோக்கத்தை பொருத்தே அமையும்.
எச்சரிக்கை தேவை
முதலீட்டாளர் நிலையான வருமானத்தை நாடுவதை பிரதான நோக்கமாக கொண்டிருந்தால்,
குறுகிய கால நிதிகள், கார்ப்பரேட் நிதிகள், வங்கி, பொதுத்துறை நிறுவன நிதிகள் ஏற்றதாக இருக்கும். வட்டி விகித குறைவால், மதிப்பு உயர்வின் பலனை பெற விரும்பினால், நீண்ட கால பத்திரங்கள் சார்ந்த நிதிகளை நாடலாம்.எனினும், பத்திர சந்தையில் கடந்த ஆண்டு பிற்பகுதியில் உண்டான, கடன் நெருக்கடி இன்னமும் தீர்ந்துவிடவில்லை என்பதை,
முதலீட்டாளர் மனதில் கொள்ள வேண்டும். டெப்ட் பண்ட்களை தேர்வு செய்வதில் முதலீட்டாளர்கள், அதிக கவனம் செலுத்த வேண்டும்.
பலனை விட, பாதுகாப்பு மற்றும் பணமாக்கும் தன்மையை நாடும், நிதிகளை தேர்வு செய்வதும் பொருத்தமாக இருக்கும் என, வல்லுனர்கள் கருதுகின்றனர். முதலீட்டாளர்கள், நீண்ட கால நிலையான தன்மையையும் முக்கிய அம்சமாக கருத வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|