பதிவு செய்த நாள்
18 ஜூன்2019
06:32
புதுடில்லி: மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், அவற்றின் துணை நிறுவனங்களை இணைக்கும் முயற்சிக்குள் இறங்க வேண்டும் அல்லது அந்த துணை நிறுவனங்களை பங்குச் சந்தையில் பட்டியலிடவேண்டும் என, மத்திய அரசு விரும்புகிறது.
இது குறித்து, நிதித்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், தங்களின் துணை நிறுவனங்களை ஒன்றிணைக்க வேண்டும் அல்லது அவற்றை, பட்டியலிட வேண்டும் என, மத்திய அரசு விரும்புகிறது. குறிப்பிட்ட சில காரணங்கள் இருந்தால் மட்டுமே, தற்போதைய நிலை நீடிக்கலாம். மொத்தமுள்ள, 169 மத்திய பொதுத்துறை நிறுவனங்களில், 120 துணை நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள், நஷ்டத்தில் இயங்குகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|