பதிவு செய்த நாள்
19 ஜூன்2019
07:16
புதுடில்லி: இன்னும் பத்து நாட்களுக்குள், மின்னணு சில்லரை வர்த்தக நிறுவனங்கள், ‘தேசிய மின்னணு வர்த்தக கொள்கை’ குறித்த தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என, மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர், பியுஷ் கோயல் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து வர்த்தக துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது: மின்னணு வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், புதிய மின்னணு வர்த்தக கொள்கை வரைவு குறித்து, குறிப்பாக, மின்னணு வர்த்தக தரவு சேமிப்பு குறித்து தங்கள் கவலைகளை பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதையடுத்து துறையினர் தங்களது கருத்துகளை, இன்னும் பத்து நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என, அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|