பதிவு செய்த நாள்
20 ஜூன்2019
07:09
கவுஹாத்தி: ஜி.எஸ்.டி., வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம், மூன்று மாதங்கள் என்பதை குறைந்தபட்சம் நான்கு மாதங்களாக அதிகரிக்க வேண்டும் என, வரி அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.
இது குறித்து, வரி மற்றும் சட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஆலோசகர்கள் கூறியதாவது: கடந்த, 2017- – 18ம் ஆண்டுக்கான, ஜி.எஸ்.டி., வரி படிவம் தாக்கல் செய்வதற்கான மூன்று மாத கால அவகாசம் என்பது மிகவும் குறைவு. நுாற்றுக்கணக்கான பிற்சேர்க்கைகள், அறிவிப்புகள், சுற்றறிக்கைகள், ஏகப்பட்ட குழப்பங்களை, ஜி.எஸ்.டி.,யில் ஏற்படுத்தி விட்டது.
கடந்த, 2017 – 18ம் ஆண்டுக்கான, ஜி.எஸ்.டி., தாக்கலுக்கான, ‘9, 9ஏ, 9சி’ படிவங்களை, ஆன்லைனில், 2019 மார்ச்சிலும், ஆப்லைனில் ஏப்ரலிலும் தான் வழங்கியது. ஆனால், படிவங்களை தாக்கல் செய்ய மூன்று மாத காலமே அவகாசம் தந்துள்ளது. இதை, நான்கு மாதங்களாக அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|