ஜி.எஸ்.டி., வரி தாக்கல்; அவகாசம் வேண்டும்ஜி.எஸ்.டி., வரி தாக்கல்; அவகாசம் வேண்டும் ... ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கலாம்: முத்ரா திட்டம் குறித்து ரிசர்வ் வங்கி குழு அறிக்கை ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கலாம்: முத்ரா திட்டம் குறித்து ரிசர்வ் வங்கி குழு ... ...
நேரடியாக பணம் செலுத்த வங்கிகளில் கட்டணம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2019
07:10

வங்கி, ‘ஆன்­லைன்’ பணப் பரி­வர்த்­த­னை­க­ளுக்­கான கட்­ட­ணத்தை ரத்து செய்து, ரிசர்வ் வங்கி சமீ­பத்­தில் அறி­விப்பு வெளி­யிட்­டது. இந்த அறி­விப்­புக்கு, வங்கி வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் மிகுந்த வர­வேற்பு இருந்­தது.

இந்­நி­லை­யில், வங்­கி­களில் நேர­டி­யாக பணம் செலுத்­து­வ­தற்­கான கட்­ட­ணங்­கள் உயர்த்­தப்­பட்­டுள்ளன. இது தொடர்­பான அறி­விப்பு பலகை, பல்­வேறு வங்­கி­களில் வைக்­கப்­பட்­டுள்­ளது.

உதா­ர­ண­மாக, கனரா வங்­கி­யில் வைக்­கப்­பட்­டுள்ள அறி­விப்பு பல­கை­யின் விப­ரம்: ஜூலை முதல், சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு உட்­பட பல்­வேறு கணக்­கு­களில், மாதத்­திற்கு மூன்று முறை மட்­டுமே, 50 ஆயி­ரம் ரூபாய் வரை இல­வ­ச­மாக பணம் செலுத்த முடி­யும். அதற்கு மேல் செலுத்­தி­னால், 50 ரூபா­யும், அதற்­கான, ஜி.எஸ்.டி.,யும் பிடித்­தம் செய்­யப்­படும். மேலும், 50 ஆயி­ரம் ரூபாய்க்கு மேல் பணம் செலுத்­தும் ஒவ்­வொரு முறை­யும், குறைந்­த­பட்­சம், 50 ரூபா­யும், அதி­க­பட்­ச­மாக 5,000 ரூபா­யும், அதற்­கான, ஜி.எஸ்.டி.,யும் பிடித்­தம் செய்­யப்­படும்.

இதே போன்று, வங்கி கிளை­யில் சேமிப்பு கணக்­கி­லி­ருந்து, ஐந்து முறை மட்­டுமே இல­வ­ச­மாக பணம் எடுக்க முடி­யும். அதற்கு மேல், ஒவ்­வொரு முறைக்­கும், 100 ரூபா­யும், ஜி.எஸ்.டி.,யும் பிடித்­தம் செய்­யப்­படும். நடப்பு கணக்­கில், 5 லட்­சம் ரூபாய் வரை மட்­டுமே இல­வ­ச­மாக பணம் எடுக்க முடி­யும். அதற்கு மேல் பணம் எடுக்­கும் ஒவ்­வொரு தொகைக்­கும், குறைந்­த­பட்­சம் 1,000 முதல் அதி­க­பட்­சம், 10 ஆயி­ரம் ரூபா­யும், ஜி.எஸ்.டி.,யும் பிடித்­தம் செய்­யப்­படும். இவ்­வாறு அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது குறித்து, வங்கி அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது: வங்­கி­களில் நேரடி பணப் பரி­வர்த்­த­னை­களை குறைக்­கும் வகை­யில் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ளன. இதற்­கான கட்­ட­ணங்­கள் வங்­கி­க­ளுக்கு வங்கி மாறு­படும். இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.

– நமது நிரு­பர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)