பதிவு செய்த நாள்
20 ஜூன்2019
07:10
வங்கி, ‘ஆன்லைன்’ பணப் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை ரத்து செய்து, ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு, வங்கி வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பு இருந்தது.
இந்நிலையில், வங்கிகளில் நேரடியாக பணம் செலுத்துவதற்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு பலகை, பல்வேறு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, கனரா வங்கியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையின் விபரம்: ஜூலை முதல், சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு உட்பட பல்வேறு கணக்குகளில், மாதத்திற்கு மூன்று முறை மட்டுமே, 50 ஆயிரம் ரூபாய் வரை இலவசமாக பணம் செலுத்த முடியும். அதற்கு மேல் செலுத்தினால், 50 ரூபாயும், அதற்கான, ஜி.எஸ்.டி.,யும் பிடித்தம் செய்யப்படும். மேலும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தும் ஒவ்வொரு முறையும், குறைந்தபட்சம், 50 ரூபாயும், அதிகபட்சமாக 5,000 ரூபாயும், அதற்கான, ஜி.எஸ்.டி.,யும் பிடித்தம் செய்யப்படும்.
இதே போன்று, வங்கி கிளையில் சேமிப்பு கணக்கிலிருந்து, ஐந்து முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். அதற்கு மேல், ஒவ்வொரு முறைக்கும், 100 ரூபாயும், ஜி.எஸ்.டி.,யும் பிடித்தம் செய்யப்படும். நடப்பு கணக்கில், 5 லட்சம் ரூபாய் வரை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். அதற்கு மேல் பணம் எடுக்கும் ஒவ்வொரு தொகைக்கும், குறைந்தபட்சம் 1,000 முதல் அதிகபட்சம், 10 ஆயிரம் ரூபாயும், ஜி.எஸ்.டி.,யும் பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது: வங்கிகளில் நேரடி பணப் பரிவர்த்தனைகளை குறைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான கட்டணங்கள் வங்கிகளுக்கு வங்கி மாறுபடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|