நேரடியாக பணம் செலுத்த வங்கிகளில் கட்டணம் அதிகரிப்புநேரடியாக பணம் செலுத்த வங்கிகளில் கட்டணம் அதிகரிப்பு ... தங்கம் விலை புதிய உச்சம் : ஒரேநாளில் ரூ.512 உயர்வு தங்கம் விலை புதிய உச்சம் : ஒரேநாளில் ரூ.512 உயர்வு ...
ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கலாம்: முத்ரா திட்டம் குறித்து ரிசர்வ் வங்கி குழு அறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2019
07:11

புது­டில்லி: முத்ரா திட்­டத்­தின் கீழ், தற்­போது வழங்­கப்­பட்டு வரும், 10 லட்­சம் ரூபாய் கடனை, இரு மடங்கு அதி­க­ரித்து, 20 லட்­சம் ரூபா­யாக வழங்­க­லாம் என, ரிசர்வ் வங்­கி­யின், நிபு­ணர்­கள் குழு தெரி­வித்­துள்­ளது.

நுண், சிறு, குறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கான, ரிசர்வ் வங்­கி­யின் நிபு­ணர்­கள் குழு, தன் பரிந்­து­ரை­களை, ரிசர்வ் வங்கி கவர்­னர் சக்­தி­காந்த தாஸி­டம் வழங்கி உள்­ளது. அதில், முத்ரா திட்­டத்­தின் கீழ், பிணை எது­வு­மில்­லா­மல், தற்­போது வழங்­கப்­பட்டு வரும், 10 லட்­சம் ரூபாய் கட­னு­த­வியை, 20 லட்­சம் ரூபா­யாக அதி­க­ரிக்­க­லாம் என, பரிந்­து­ரைத்­துள்­ளது.

பரிந்­து­ரை:
நுண், சிறு, குறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் வரை­யறை குறித்து ஆராய்­வ­தற்­காக, எட்டு உறுப்­பி­னர்­கள் கொண்ட குழு ஒன்றை, ரிசர்வ் வங்கி அமைத்­தி­ருந்­தது. இக்­கு­ழு­வுக்கு, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’யின் முன்­னாள் தலை­வர், யு.கே.சின்ஹா தலைமை ஏற்­றுள்­ளார். கடந்த செவ்­வாய் அன்று, இக்­கு­ழு­வா­னது, தன் அறிக்­கையை ரிசர்வ் வங்­கி­யி­டம் அளித்­துள்­ளது.

நுண், சிறு, குறு, நடுத்­தர நிறு­வ­னங்­களின் பொரு­ளா­தார, நிதி ஸ்தி­ரத்­தன்மை குறித்த, பல்­வேறு நீண்ட கால தீர்­வு­களை, இந்த அறிக்­கை­யில் ரிசர்வ் வங்கி குழு அளித்­துள்­ளது. மேலும், இடர்ப்­பாட்டு கடன்­களை மறு­சீ­ர­மைப்பு செய்­வது குறித்­தும், அறிக்­கை­யில் ஆலோ­ச­னை­கள் வழங்­கப்­பட்­டுள்ளன. நுண், சிறு, குறு, நடுத்­தர நிறு­வ­னங்­களின் வரை­ய­றையை மாற்­று­வது குறித்து, அரசு சிந்­தித்­துக் கொண்­டி­ருக்­கும் நேரத்­தில், இந்த குழு­வின் பரிந்­து­ரை­கள் வந்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

புதிய வளைவு:
கடந்த, 2006ம் ஆண்­டின் வரை­ய­றை­யின் படி, கீழ்க்­கண்­ட­வாறு உற்­பத்­தி­யில் ஈடு­பட்­டுள்ள நிறு­வ­னங்­கள், வகை பிரிக்­கப்­பட்­டுள்ளன.முத­லீடு, 25 லட்­சம் ரூபாய்க்கு குறை­வாக செய்­யப்­பட்­டி­ருந்­தால், நுண் நிறு­வ­ன­மா­கும். முத­லீடு, 25 லட்­சத்­தி­லி­ருந்து, 5 கோடி ரூபாய் வரை எனில், சிறு நிறு­வ­ன­மா­கும். முத­லீடு, 5 கோடி­யி­லி­ருந்து, 10 கோடி ரூபாய் வரை எனில், நடுத்­தர நிறு­வ­ன­மா­கும்.

இதுவே, சேவை நிறு­வ­னங்­கள் எனில், 10 லட்­சம் ரூபாய் வரை, நுண்; 10 லட்­சம் முதல், 2 கோடி ரூபாய் வரை, சிறு; 2 கோடி முதல், 5 கோடி ரூபாய் வரை எனில், நடுத்­தர நிறு­வ­னங்­க­ளா­கும். நிறு­வ­னங்­களை வகை பிரிப்­பது குறித்து, அர­சின் புதிய வரைவு திட்­டத்­தின்­படி உற்­பத்தி நிறு­வ­னங்­க­ளுக்­கும், சேவை நிறு­வ­னங்­க­ளுக்­கும் எந்த வேறு­பா­டும் கிடை­யாது.

விற்­று­மு­தல், 5 கோடி ரூபாய் வரை இருப்­பின், அது நுண் நிறு­வ­ன­மா­கும். 75 கோடி ரூபாய் வரை இருப்­பின், அது சிறு நிறு­வ­ன­மா­கும். 250 கோடி ரூபாய் வரை இருப்­பின், அது நடுத்­தர நிறு­வ­ன­மா­கும். இந்த புதிய வரைவு, அமைச்­ச­ரவை குழு­வால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டா­லும், இன்­னும் அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை. இந்­நி­லை­யில், குழு­வி­ன­ரின் இந்த அறிக்­கையை, விரை­வில் பொது­மக்­கள் பார்­வைக்கு, ரிசர்வ் வங்கி வைக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

முத்ரா திட்­டம்:
முத்ரா திட்­டத்தை, பிர­த­மர் மோடி, 2015 ஏப்., 8ம் தேதி துவங்கி வைத்­தார். இத்­திட்­டத்­தின் கீழ், மூன்று வகை­களில், கடன் வழங்­கப்­ப­டு­கிறது. ‘சிசு’ திட்­டத்­தில், 50 ஆயி­ரம் ரூபாய் வரை; ‘கிஷோர்’ திட்­டத்­தில், 50 ஆயி­ரம் முதல், 5 லட்­சம் ரூபாய் வரை; ‘தருண்’ திட்­டத்­தில், 5 லட்­சம் முதல், 10 லட்­சம் ரூபாய் வரை கடன், வங்­கி­கள் மூலம் வழங்­கப்­ப­டு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)