பதிவு செய்த நாள்
20 ஜூன்2019
11:01
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகநேர துவக்கத்தில் சரிந்து சற்றுநேரத்திலேயே உயர்வு கண்டன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 35 புள்ளிகளும், நிப்டி 23.45 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகின. ஐடி தொடர்பான பங்குகள் சரிவை சந்தித்ததால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கின. இருப்பினும் சற்றுநேரத்தில் ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் உயர்ந்தன. காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 111 புள்ளிகள் உயர்ந்து 39,224ஆகவும், நிப்டி 29 புள்ளிகள் உயர்ந்து 11,720ஆகவும் வர்த்தகமாகின.
ரூபாயின் மதிப்பு உயர்வு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு காலை 11 மணியளவில் 5 காசுகள் உயர்ந்து ரூ.69.63ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|