பதிவு செய்த நாள்
22 ஜூன்2019
06:35
‘தமிழகத்துக்கு, இன்னும் வழங்கப்படாமல் உள்ள, கடந்த ஆண்டுக்கான, ஜி.எஸ்.டி., வரி நிலுவை தொகையை, உடனடியாக தர வேண்டும்’ என, தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
டில்லியில் நேற்று நடந்த, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற, தமிழக மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் பேசியதாவது: தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய, கடந்த ஆண்டுக்கான, ஜி.எஸ்.டி., வரி தொகை, 4,459 கோடி ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., இழப்பீட்டு தொகையான, 386 கோடி ரூபாயை விரைந்து வழங்க வேண்டும்.
சிறிய சேவை வழங்குபவர்களின் நலனை கருத்தில் வைத்து, இணக்க முறையில், வரி செலுத்துவதற்கான காலக் கெடுவை, ஆகஸ்ட், 31வரை, நீட்டிப்பு செய்ய வேண்டும். தமிழகம் சார்பில் முன்வைக்கப்பட்டு, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள, பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி குறைப்பு, மற்றும் வரி விலக்கு தொடர்பான கோரிக்கைகள் மீது, விரைந்து முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|