பதிவு செய்த நாள்
28 ஜூன்2019
06:00
புதுடில்லி: வாடியா குழுமத்தைச் சேர்ந்த, ‘கோ ஏர்’ விமான சேவை நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வர திட்டமிட்டு வருகிறது.
பங்கு வெளியீட்டுக்கு வருவதன் மூலம், 1,728 – 2074 கோடி ரூபாய் நிதி திரட்ட, இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.விமான சேவை வழங்கும் நிறுவனங்களில், இறுதியாக, 2015 அக்டோபரில், ‘இண்டிகோ’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வந்தது. அதன் பின், வேறு நிறுவனங்கள் எதுவும் வரவில்லை.இந்நிலையில், பங்கு வெளியீட்டுக்கு வருவது குறித்து, ‘சிட்டி பேங்க், மார்கன் ஸ்டான்லி’ உள்ளிட்ட நிறுவனங்களுடன், கோ ஏர் பேச்சு நடத்தி வருகிறது.
இந்நிறுவனம், இரண்டு புதிய விமானங்களை வாங்க உள்ளது. இதற்கு நிதி தேவைப்படுகிறது. மேலும், ‘ஜெட் ஏர்வேஸ்’ இல்லாத நிலையில், பயணியர் விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.இது போன்ற காரணங்களால், நடப்பு ஆண்டில் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில், பங்கு வெளியீட்டுக்கு வரக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|