அரசு பணிகளுக்காக தனி தகவல் தொடர்புஅரசு பணிகளுக்காக தனி தகவல் தொடர்பு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிவு ...
இந்தியாவின் வரி அதிகரிப்பை ஏற்க முடியாது: டிரம்ப்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2019
06:34

புதுடில்லி: ‘‘அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், 28 பொருட்களுக்கான சுங்க வரியை, இந்தியா ரத்து செய்ய வேண்டும்,’’ என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்த, ‘வர்த்தக முன்னுரிமை நாடு’ எனும் அந்தஸ்தை, அமெரிக்கா சமீபத்தில் நீக்கியதாக அறிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், 28 பொருட்களுக்கான வரியை, இந்தியாவும் அதிகரித்தது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், வரியை ரத்து செய்ய வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து, டிரம்ப் கூறியதாவது: பல ஆண்டுகளாக, அமெரிக்க பொருட்களுக்கு மிக அதிக வரியை, இந்தியா விதித்து வருகிறது; தற்போது, வரியை மேலும் அதிகரித்துள்ளது.இது குறித்து, பிரதமர்மோடியுடன் பேச உள்ளேன். இந்த வரி விதிப்பு ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்தியா, இதை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

ஜப்பானில் இன்று துவங்கவிருக்கும், ‘ஜி20’ மாநாட்டில், பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேச இருக்கிறார். அப்போது, இரு நாட்டு தலைவர்களும், இறக்குமதி வரி விதிப்புகள் குறித்து பேசுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்பின் இந்த கருத்தையடுத்து, மத்திய அரசின் நிலை என்ன என்பது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியாவின் வரி விதிப்பு, மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில், அதிகம் கிடையாது. இந்தியாவின் வரி விதிப்பு, உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு ஏற்பவே அமைந்துள்ளது. அது மட்டுமல்ல, சில பொருட்களுக்கு, இந்தியாவை விட, அமெரிக்கா அதிக வரி விதித்துள்ளதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

இதற்கிடையே, டிரம்பின் இந்த கருத்துகள், வர்த்தக உரசல் போக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என, நிபுணர்கள் கருதுகின்றனர். சமீபத்தில், டில்லி வந்த, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர், போம்பியோ, இரு நாடுகளுக்கும் இடையே சமீப காலமாக நிலவி வரும் வர்த்தக பதற்றத்தை குறைப்பதற்கான முயற்சிகளை எடுத்தார்.மேலும், பாதுகாப்பு, வர்த்தகம் குறித்து, பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர், ஜெய்சங்கர் ஆகியோருடன் கலந்தாலோசித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)