ஒற்றைச்சாளர முறை  இணைய பக்கத்தில் தமிழ் ஒற்றைச்சாளர முறை இணைய பக்கத்தில் தமிழ் ...  90 ஆயிரம் கோடி ரூபாய் டிவிடெண்டு:ரிசர்வ் வங்கியிடம் எதிர்பார்க்கும் மத்திய அரசு 90 ஆயிரம் கோடி ரூபாய் டிவிடெண்டு:ரிசர்வ் வங்கியிடம் எதிர்பார்க்கும் ... ...
தேசிய வீட்டுவசதி வங்கி அதிகாரம் பறிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2019
23:52

சென்னை:வீட்டுவசதி நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்காக, தேசிய வீட்டுவசதி வங்கிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை திரும்ப பெற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.



பொதுத் துறை, தனியார் வங்கிகள், ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றன. இவற்றில் இருந்து, மக்கள், வீட்டுக் கடன்களை பெறுகின்றனர்.


இதேபோல், வங்கி சாரா தனியார் வீட்டுவசதி நிதி நிறுவனங்களும் செயல்படுகின்றன. இந்நிறுவனங்களின் கடன் வழங்கும் செயல்பாடுகளை நெறிப்படுத்த, தேசிய வீட்டுவசதி வங்கி, 1987ல், துவங்கப்பட்டது.வீட்டுக்கடன் திட்டங்களை செயல்படுத்த, இந்நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் தருவது உள்ளிட்ட பணிகளை, தேசிய வீட்டுவசதி வங்கி கண்காணிக்க வேண்டும்.


இந்நிலையில், தனியார் வீட்டுவசதி நிதி நிறுவனங்களுக்கு, கடன் வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.இது குறித்து, உயர் நிலை விசாரணைக்கு உத்தர விடப்பட்டது. மேலும், புகாருக்கு ஆளான சில அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். இதனால், தேசிய வீட்டுவசதி வங்கியின் எதிர்காலம் கேள்விக்குறியானது.


இந்நிலையில், தனியார் வீட்டுவசதி நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் தேசிய வீட்டுவசதி வங்கியின் அதிகாரம் பறிக்கப்பட்டு, அது மீண்டும் இந்திய ரிசர்வ் வங்கியிடமே ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. இதனால், தேசிய வீட்டுவசதி வங்கி, அதிகாரம் இல்லாத அமைப்பாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)