90 ஆயிரம் கோடி ரூபாய் டிவிடெண்டு:ரிசர்வ் வங்கியிடம் எதிர்பார்க்கும் மத்திய அரசு 90 ஆயிரம் கோடி ரூபாய் டிவிடெண்டு:ரிசர்வ் வங்கியிடம் எதிர்பார்க்கும் ... ...  இ.டி.எப்., திட்டங்களில் ஈர்ப்பு அதிகமாகும் இ.டி.எப்., திட்டங்களில் ஈர்ப்பு அதிகமாகும் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வீட்டுக்கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2019
00:04

சொந்த வீடு கனவை நிறைவேற்றிக்கொள்ள, வீட்டுக்கடன் கைகொடுக்கிறது. எனினும், வீட்டுக்கடனுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், மிகவும் ஏமாற்றமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும். எனவே, பொதுவாக வீட்டுக்கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்களை தெரிந்து, அதற்கேற்ப திட்டமிடுவது நல்லது.




கிரெடிட் ஸ்கோர்: வங்கிகள், கடனுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, ‘கிரெடிட் ஸ்கோர்’ எனும், கடன் தகுதி மதிப்பெண்ணை, முக்கியமாக கருதுகின்றன. கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால், வங்கிகள், கடன் வழங்க மறுக்கலாம் அல்லது தயங்கலாம். கிரெடிட் ஸ்கோரில், விபரங்கள் தவறாக இருந்தாலும், பாதிப்பை ஏற்படுத்தும். இதை கவனித்து, சரி செய்ய வேண்டும்.




கடன் தகுதி: ஒவ்வொரு வங்கியும், கடன் வழங்குவதற்கான வயது வரம்பை கொண்டிருக்கலாம். பொதுவாக, வங்கிகள், இளம் வயதினர் மற்றும் பணி புரியும் வயதினருக்கு, எளிதாக கடன் வழங்குகின்றன. ஓய்வு பெறும் காலத்தை நெருங்கும் வயதினர் என்றால், கடனை திரும்ப செலுத்த போதிய காலம் இல்லை என கருதி, விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.





கடன் சுமை: ஏற்கனவே, கடன் சுமை உடையவர்களுக்கு, வங்கிகள் கடன் வழங்க தயங்கலாம். அதிக கடன் கொண்ட, பல்வேறு கடன்களை பெற்றிருப்பவர் விண்ணப்பம், நிராகரிக்கப்படலாம். எனவே, கிரெடிட் கார்டு கடன் போன்றவற்றை, கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். கடன் சுமையை, குறைத்துக்கொள்வதும் அவசியம். முறையாக, தவணையை செலுத்தி வர வேண்டும்.





வேலை அம்சங்கள்: ஒருவர், பணிபுரியும் நிறுவனம் சார்ந்த அம்சங்களும், கடன் அனுமதியை தீர்மானிக்கலாம். நிறுவனத்தின் நம்பகத்தன்மை, வேலையின் தன்மை ஆகிய அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும். அதே போல, அடிக்கடி வேலை மாறுவதும், பாதகமான அம்சமாக கருதப்படும். கடனுக்கான, குறைந்த பட்ச வருமான தகுதியும், முக்கிய அம்சமாக அமைகிறது.





ஆவணங்கள்: வீட்டுக்கடன், ஆவணங்கள் அடிப்படையில் அளிக்கப்படுகிறது. எனவே, தேவையான ஆவணங்களை சமர்பிப்பதில் ஏதேனும் தவறு செய்தால் அல்லது அளிக்கப்படும் சான்றிதழ்களில் குறை இருந்தால், அது பாதிப்பை ஏற்படுத்தும். வாங்க இருக்கும் சொத்து, வில்லங்கம் இல்லாமல் இருப்பதையும், உறுதி செய்து கொள்வது அவசியம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)