பதிவு செய்த நாள்
10 ஜூலை2019
00:14
சென்னை:‘‘ஐ.ஓ.பி., எனும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நடப்பு நிதியாண்டில்,
நஷ்டத்திலிருந்து லாபத்திற்கு மாறும் என்ற நம்பிக்கை உள்ளது,’’ என,
இதன் நிர்வாக இயக்குனர், கர்ணம் சேகர் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:ஐ.ஓ.பி.,
ஐந்து ஆண்டுகளாக, நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நான்கு ஆண்டுகளாக,
பி.சி.ஏ., எனும் இந்திய ரிசர்வ் வங்கியின், ‘உடனடி திருத்த
நடவடிக்கை’ வரையறையில் இருந்தது. தற்போது இரண்டிலும் இருந்து வெளியே வரும் முயற்சிகளை, ஐ.ஓ.பி., மேற்கொண்டுள்ளது.
சிறப்பு
முகாம்கள் நடத்தப்பட்டு, நீண்ட கால நிலுவைக் கடன்களை வசூலிக்க
உள்ளோம். நஷ்டத்தில் செயல்படும் வங்கி கிளைகளின் எண்ணிக்கையும்
குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசிடம், வங்கியின் மூலதனத்திற்காக, 6,000 கோடி ரூபாய் நடப்பு ஆண்டிற்காக கோரப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|