பதிவு செய்த நாள்
11 ஜூலை2019
23:37
சென்னை:தொழிற்சாலைகள் மற்றும் அவற்றில் பணிபுரிபவர்கள் எண்ணிக்கையில், இந்தியாவில் முதலிடத்தை தமிழகம் பிடித்துள்ளது.
இந்திய அளவில், 37 ஆயிரத்து, 220 தொழிற்சாலைகள்;
24 லட்சம் பணியாளர்கள் என, தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக,
தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக
அரசின் தொழில் துறை மானியக் கோரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
பெருந்தொழில் துறை தொடர்பான கொள்கை விளக்கக் குறிப்பில்
இடம்பெற்றுள்ள தகவல்கள்:
இந்தியாவில், தொழிற்சாலைகள் அதிகம்
உள்ள மாநிலமாக, தமிழகம் உள்ளது. தொழிற்சாலைகளில் பணிபுரியும்
ஊழியர்கள் எண்ணிக்கையிலும், தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
மொத்தம், 37 ஆயிரத்து, 220 தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில், 24
லட்சத்து, 8,282 பேர், பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மஹாராஷ்டிரா
மற்றும் குஜராத் மாநிலங்கள், முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம்
இடத்தில் உள்ளன. தொழிற்சாலைகளில் செய்யப்பட்ட மூலதன முதலீட்டில்,
4.02 லட்சம் கோடி ரூபாயுடன், மூன்றாம் இடத்தில் தமிழகம் உள்ளது.குஜராத்,
8.14 லட்சம் கோடி ரூபாயுடன், முதல் இடத்திலும்; மஹாராஷ்டிரா, 5.02
லட்சம் கோடி ரூபாயுடன், இரண்டாம் இடத்திலும் உள்ளன.
மொத்த
உற்பத்தியில், 7.65 லட்சம் கோடி ரூபாயுடன், தமிழகம் மூன்றாம்
இடத்திலும்; குஜராத், 12.22 லட்சம் கோடி ரூபாயுடன், முதல்
இடத்திலும்; 10.74 லட்சம் கோடி ரூபாயுடன், மஹாராஷ்டிரா இரண்டாம்
இடத்திலும் உள்ளன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|