பதிவு செய்த நாள்
12 ஜூலை2019
23:23
சென்னை:தமிழகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வாயிலாக, 2.23 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளதாக, எம்.எஸ்.எம்.இ., துறை தெரிவித்துள்ளது.
இத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியிடப்பட்ட கூடுதல் விபரங்கள்: தமிழகத்தில், 20.13 லட்சம் தொழில் முனைவோர், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் பதிவு செய்துள்ளனர். இதன் வாயிலாக, 2.23 லட்சம் கோடி ரூபாய் முதலீடும், 1.29 கோடி பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது; மேலும், 6,000 பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், ‘உத்யோக் ஆதார்’ பதிவு அறிக்கையை, 2016ல் அறிமுகப்படுத்தியது. இந்த பதிவு முறையில், மார்ச் வரை, 7.61 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.இதில், 6.70 லட்சம் குறுந்தொழில்; 88 ஆயிரத்து, 355 சிறு தொழில் மற்றும் 2,306 நடுத்தர தொழில் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|