பதிவு செய்த நாள்
12 ஜூலை2019
23:24
சென்னை:ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘இ – வே’ பில் முறையில், தமிழகத்தில், ஓராண்டில், ஐந்து கோடி, ‘பில்’கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, வணிக வரித் துறை தெரிவித்து உள்ளது.
இது குறித்து, இத்துறை மேலும் தெரிவித்துள்ளதாவது:ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கிடையே சரக்குகளை எடுத்துச் செல்ல, ‘ஆன்லைன்’ வாயிலாக அனுமதி பெறும், இ – வே பில் முறை, கடந்த ஆண்டு, ஏப்., 1ல் அமல்படுத்தப்பட்டது.மாநிலத்துக்கு உள்ளே, 1 லட்சம் ரூபாய்க்கு அதிக மதிப்பிலான சரக்குகளை எடுத்துச் செல்ல, இ – வே பில் பெறும் திட்டம், கடந்த ஆண்டு ஜூனில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன் வாயிலாக, நடப்பு ஆண்டு மார்ச் வரை, மாநிலங்களுக்கிடையே சரக்குகளை எடுத்துச் செல்ல, 2.01 கோடி, இ – வே பில்லும்; மாநிலங்களுக்கு உள்ளே சரக்குகளை எடுத்துச் செல்ல, 2.98 கோடி, இ – வே பில்லும் பதிவு செய்யப்பட்டுள்ளன.இ – வே பில் உருவாக்குவதில், இந்திய அளவில் தமிழகம், ஐந்தாவது இடத்தில் உள்ளது.
மேலும், மதிப்பு கூட்டு வரி பதிவு பெற்ற, 5.89 லட்சம் வணிகர்கள், ஜி.எஸ்.டி., இணைய தளத்தில் தங்கள் விபரங்களை பதிவேற்றம் செய்துஉள்ளனர்.இது தவிர, மார்ச் வரை, வரி செலுத்துவோரில், ஒன்பது லட்சத்து, 66 ஆயிரத்து, 150 பேர், ஜி.எஸ்.டி., இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|