பதிவு செய்த நாள்
15 ஜூலை2019
00:32
கோடிகளில் சம்பாதித்தால் தான், செல்வந்தராக முடியும் என்றில்லை. கைநிறைய சம்பாதிக்கும் பலரும், மாதக்கடைசியில், கையில் பணமில்லாமல் திண்டாடுவதை பார்க்கலாம். ஒருவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதைவிட, எப்படி செலவு செய்கிறார் என்பதே முக்கியமாக
அமைகிறது. செலவுகளை குறைப்பதே செல்வம் சேர்ப்பதற்கு அடிப்படை.
செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான வழிகள்: -
நுகர்வு வாழ்க்கை: இன்றைய காலகட்டத்தில் வருமானம் அதிகரித்திருக்கிறது; அதே நேரத்தில், வாய்ப்புகளும் பன்மடங்காக பெருகியிருக்கின்றன. எனவே, நுகர்வு கலாசாரத்தால்
ஈர்க்கப்பட்டு, பலரும் வாழ்வியல் செலவுகளை அதிகமாக்கி கொள்கின்றனர். ஆக, முதலில் நுகர்வு சார்ந்த வாழ்வியலை கட்டுப்படுத்த வேண்டும்.
திட்டமிடுங்கள்: விற்பனை வளாகங்கள், மால்கள் பெருகியிருக்கும் நிலையில், பலரும் பார்த்தவுடன் வாங்கும் பழக்கம் கொண்டுள்ளனர். எதையும் திட்டமிட்டு செய்வதில்லை,
விருப்பம்
போல வாழ்கிறேன் என்று சொல்வது, பொருளாதார நோக்கில் பாதகமான
விளைவையே ஏற்படுத்தும். திட்டமிட்டு செலவு செய்வதே ஏற்றது என,
அறியவும்.
சேமிப்பு பட்ஜெட்: மாத செலவுகளை, பட்ஜெட் போட்டு மேற்கொள்வது அவசியம். ஆனால், அடிப்படை செலவுகள், எதிர்பாராத
செலவுகளுக்கு ஒதுக்கிவிட்டு, எஞ்சிய தொகையை சேமிக்கும், செலவு
பட்ஜெட் ஏற்றது அல்ல. இதில் சேமிக்க பணமில்லாமல் போகலாம். முதலில்
சேமிப்புக்கு பணம் ஒதுக்கிவிட்டு, பின்னர் செலவுகளை கவனிக்க
வேண்டும்.
எதிர்கால தேவைகள்: எதிர்காலத்தை கருத்தில்
கொள்ளாமல், நிகழ்கால தேவைகளில் மட்டும் கவனம் செலுத்துவதே, செலவு
பழக்கங்கள் கட்டுப்படுத்த முடியாமல் இருக்க முக்கிய காரணம். எனவே,
எதிர்கால தேவைகளை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். அதற்கேற்ப திட்டமிட்டு செலவுகளை குறைத்துக்கொள்ள முடியும்.
வீண் காரணங்கள்: சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். இன்று கையில் போதிய பணம் இல்லை, அதிக பணம் வந்ததும் சேமிப்பேன் என்றோ, முதலில் அதிகம்
சம்பாதிக்க
துவங்கி, பின்னர் சேமிப்பேன் என்றோ காரணங்கள் சொல்லாமல், சேமிக்க
துவங்க வேண்டும். வாங்கும் சம்பளத்தில் சேமிப்பதன் மூலமே வளமான
வாழ்க்கையை பெற முடியும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|