பதிவு செய்த நாள்
15 ஜூலை2019
00:38
வரிச்சலுகையை
மட்டும் முதன்மையாக கருதாமல், ‘பென்ஷன்’ திட்டமான, என்.பி.எஸ்., எப்படி
செயல்படுகிறது என்பதை புரிந்து கொண்டு, அதில் முதலீடு செய்வது அவசியம்.
தேசிய
பென்ஷன் திட்டமான, என்.பி.எஸ்., மிகவும் பிரபலமான ஓய்வுகால
திட்டம்.
ஓய்வுகால திட்டமிடலுக்கு ஏற்றதாக இருப்பதோடு,
என்.பி.எஸ்., திட்டம் வழக்கமான வரிச்சலுகையோடு, கூடுதலாக, 50 ஆயிரம் ரூபாய் சலுகை அளிப்பதும் ஈர்ப்புடையதாக
அமைகிறது. மேலும், 2019 பொது பட்ஜெட்டில், என்.பி.எஸ்., திட்டத்தில் இருந்து இறுதியாக விலக்கிகொள்ளப்படும் தொகைக்கு முழு வரிச்சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது, இத்திட்டத்தை
மேலும் ஈர்ப்புடையதாக மாற்றி இருக்கிறது. எனினும், வரிச்சலுகையை
மட்டும் மனதில் கொண்டு, இந்த திட்டத்தில் முதலீடு செய்வது தவறான அணுகுமுறை என, வல்லுனர்கள் கருதுகின்றனர்.
வரிச்சலுகையை தனியே பார்க்காமல், ஒட்டுமொத்த நிதி திட்டமிடலின் அங்கமாக பார்த்தால் மட்டுமே, என்.பி.எஸ்., மூலம் அதிக பலன் பெற முடியும். அந்த
வகையில், என்.பி.எஸ்.,
திட்டத்தில் சரியான முறையில் முதலீடு
செய்யும் வழியை அறிந்திருக்க வேண்டும் என்றும் வல்லுனர்கள்
வலியுறுத்துகின்றனர். அதற்கு, முதலில் இந்த திட்டத்தின்
தன்மையையும், அது செயல்படும் விதத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
எந்த
திட்டத்தில் முதலீடு செய்வதாக இருந்தாலும், முதலில் அந்த திட்டம்
பற்றி
முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். என்.பி.எஸ்.,
திட்டத்திற்கும் இது பொருந்தும். என்.பி.எஸ்., பயனாளிகள் பங்களிப்பு
செலுத்தும் திட்டமாகும். இதில் செலுத்தும் தொகை பென்ஷன் நிதியாக
பரமாரிக்கப்படுகிறது. 18 வயது முதல் இதில் இணைந்து, 60 வயது வரை
பங்களிப்புசெலுத்தலாம். முதிர்வு காலத்தில், 40 சதவீத தொகையை பென்ஷனுக்கான
ஆண்டளிப்பாக வைத்து, எஞ்சிய, 60 சதவீத தொகையை விலக்கி கொள்ளலாம்.
இத்திட்டத்தில் வழக்கமான வரிச்சலுகையோடு, கூடுதலாக, 50 ஆயிரம் ரூபாய் வரிச்சலுகை கோரலாம். எனினும், என்.பி.எஸ்., திட்டம் பொது வருங்கால சேமிப்பு நிதி திட்டமான, பி.பி.எப்., போன்றது அல்ல. பி.பி.எப்., திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்தால் குறிப்பிட்ட தொகையை செலுத்தி, அதற்கான வட்டி விகிதத்துடன் முதிர்வு காலத்தில் பலன் பெறலாம். என்.பி.எஸ்., திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு முதலீட்டை தேர்வு செய்யும் வாய்ப்பு இருக்கிறது.
இதற்காக தானாக செயல்படும், ‘ஆட்டோ சாய்ஸ்’ அல்லது விருப்பத்தின் அடிப்படையில் முதலீடு விகிதத்தை தேர்வு செய்யும், ‘ஆக்டிவ் சாய்ஸ்’ ஆகிய இரண்டு வாய்ப்புகளில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம். சமபங்கு முதலீட்டின் பலனையும் பெறலாம். எனினும், அதிகபட்சமாக, 75 சதவீதம் வரை மட்டுமே சமபங்குகளில் முதலீடு செய்யலாம்.
என்.பி.எஸ்., திட்டத்தில் முதலீடு செய்யும் போது, இது ஓய்வுகால திட்டம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். வரிச்சலுகை இது அளிக்கும் கூடுதல் பலனாகும். ஆனால், வரிச்சலுகைக்காக மட்டும்
முதலீடு செய்தால், இதில் முதலீடு செய்யும் தொகை, ஓய்வு
காலத்திற்கு
ஏற்ப அமையாது. எனவே, பிரதானமாக ஒருவர் தன் ஓய்வு கால
திட்டமிடலுடன் இந்த திட்டத்தை இணைத்து, அதற்கேற்ப முதலீடு செய்ய
வேண்டும்.
பொதுவாக, இளம் வயதினருக்கு இத்திட்டம் மிகவும்
ஏற்றதாக கருதப்படுகிறது. காரணம், இளம் வயதில் சமபங்கில் அதிக
அளவில் முதலீடு செய்யும் சாத்தியம் உள்ளது. மற்றவர்கள்,
என்.பி.எஸ்., திட்டத்தை மட்டும் சார்ந்திராமல், ஓய்வு கால
திட்டமிடலில் இதை ஒரு முக்கிய அங்கமாக கருதி செயல்படலாம். ஓய்வு
காலத்திற்கு எவ்வளவு தொகை தேவைப்படும்
என்பதை அறிந்து அதில்,
என்.பி.எஸ்., எந்த அளவு பங்களிப்பு செலுத்தும் என்பதை உணர்ந்து
செயல்பட வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|