வளமான வாழ்க்கையை பெறுவதற்கான எளிய வழி!வளமான வாழ்க்கையை பெறுவதற்கான எளிய வழி! ...  செய்வதை துணிச்சலோடு செய்யுங்கள்! செய்வதை துணிச்சலோடு செய்யுங்கள்! ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
என்.பி.எஸ்., திட்­டத்­தில் சரி­யாக முத­லீடு செய்­வது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2019
00:38

வரிச்சலுகையை மட்டும் முதன்மையாக கருதாமல், ‘பென்ஷன்’ திட்டமான, என்.பி.எஸ்., எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்து கொண்டு, அதில் முதலீடு செய்வது அவசியம்.



தேசிய பென்­ஷன் திட்­ட­மான, என்.பி.எஸ்., மிக­வும் பிர­ப­ல­மான ஓய்­வு­கால திட்­டம்.
ஓய்­வு­கால திட்­ட­மி­ட­லுக்கு ஏற்­ற­தாக இருப்­ப­தோடு, என்.பி.எஸ்., திட்­டம் வழக்­க­மான வரிச்­ச­லு­கை­யோடு, கூடு­த­லாக, 50 ஆயிரம் ரூபாய் சலுகை அளிப்­ப­தும் ஈர்ப்­பு­டை­ய­தாக
அமை­கிறது. மேலும், 2019 பொது பட்­ஜெட்­டில், என்.பி.எஸ்., திட்­டத்­தில் இருந்து இறு­தி­யாக விலக்கிகொள்­ளப்­படும் தொகைக்கு முழு வரிச்­ச­லு­கை­யும் அளிக்­கப்­பட்­டுள்­ளது, இத்­திட்­டத்தை மேலும் ஈர்ப்­பு­டை­ய­தாக மாற்றி இருக்­கிறது. எனி­னும், வரிச்­ச­லு­கையை மட்­டும் மன­தில் கொண்டு, இந்த திட்­டத்­தில் முத­லீடு செய்­வது தவ­றான அணு­கு­முறை என, வல்­லு­னர்­கள் கரு­து­கின்­ற­னர்.



வரிச்­ச­லு­கையை தனியே பார்க்­கா­மல், ஒட்­டு­மொத்த நிதி திட்­ட­மி­ட­லின் அங்­க­மாக பார்த்­தால் மட்­டுமே, என்.பி.எஸ்., மூலம் அதிக பலன் பெற முடி­யும். அந்த வகை­யில், என்.பி.எஸ்.,
திட்­டத்­தில் சரி­யான முறை­யில் முத­லீடு செய்­யும் வழியை அறிந்­தி­ருக்க வேண்­டும் என்­றும் வல்­லு­னர்­கள் வலி­யு­றுத்­து­கின்­ற­னர். அதற்கு, முத­லில் இந்த திட்­டத்­தின் தன்­மை­யை­யும், அது செயல்­படும் விதத்­தை­யும் புரிந்து கொள்ள வேண்­டும்.



எந்த திட்­டத்­தில் முத­லீடு செய்­வ­தாக இருந்­தா­லும், முத­லில் அந்த திட்­டம் பற்றி
முழு­மை­யாக தெரிந்து கொள்ள வேண்­டும். என்.பி.எஸ்., திட்­டத்­திற்­கும் இது பொருந்­தும். என்.பி.எஸ்., பய­னா­ளி­கள் பங்­க­ளிப்பு செலுத்­தும் திட்­ட­மா­கும். இதில் செலுத்­தும் தொகை பென்­ஷன் நிதி­யாக பர­மா­ரிக்­கப்­ப­டு­கிறது. 18 வயது முதல் இதில் இணைந்து, 60 வயது வரை பங்­க­ளிப்புசெலுத்­த­லாம். முதிர்வு காலத்­தில், 40 சத­வீத தொகையை பென்­ஷ­னுக்­கான
ஆண்­ட­ளிப்­பாக வைத்­து, எஞ்­சிய, 60 சத­வீத தொகையை விலக்கி கொள்­ள­லாம்.



இத்­திட்­டத்­தில் வழக்­க­மான வரிச்­ச­லு­கை­யோடு, கூடு­த­லாக, 50 ஆயிரம் ரூபாய் வரிச்­ச­லுகை கோர­லாம். எனி­னும், என்.பி.எஸ்., திட்­டம் பொது வருங்­கால சேமிப்பு நிதி திட்­ட­மான, பி.பி.எப்., போன்­றது அல்ல. பி.பி.எப்., திட்­டத்­தில் உறுப்­பி­ன­ராக சேர்ந்­தால் குறிப்­பிட்ட தொகையை செலுத்தி, அதற்­கான வட்டி விகி­தத்­து­டன் முதிர்வு காலத்­தில் பலன் பெற­லாம். என்.பி.எஸ்., திட்­டத்­தில் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு முத­லீட்டை தேர்வு செய்­யும் வாய்ப்பு இருக்­கிறது.




இதற்­காக தானாக செயல்­படும், ‘ஆட்டோ சாய்ஸ்’ அல்­லது விருப்­பத்­தின் அடிப்­ப­டை­யில் முத­லீடு விகி­தத்தை தேர்வு செய்­யும், ‘ஆக்­டிவ் சாய்ஸ்’ ஆகிய இரண்டு வாய்ப்­பு­களில் இருந்து தேர்வு செய்து கொள்­ள­லாம். சம­பங்கு முத­லீட்­டின் பல­னை­யும் பெற­லாம். எனி­னும், அதி­க­பட்­ச­மாக, 75 சத­வீ­தம் வரை மட்­டுமே சம­பங்­கு­களில் முத­லீடு செய்­ய­லாம்.



என்.பி.எஸ்., திட்­டத்­தில் முத­லீடு செய்­யும் போது, இது ஓய்­வு­கால திட்­டம் என்­பதை மன­தில் கொள்ள வேண்­டும். வரிச்­ச­லுகை இது அளிக்­கும் கூடு­தல் பல­னா­கும். ஆனால், வரிச்­ச­லு­கைக்­காக மட்­டும் முத­லீடு செய்­தால், இதில் முத­லீடு செய்­யும் தொகை, ஓய்வு
காலத்­திற்கு ஏற்ப அமை­யாது. எனவே, பிர­தா­ன­மாக ஒரு­வர் தன் ஓய்வு கால திட்­ட­மி­ட­லு­டன் இந்த திட்­டத்தை இணைத்து, அதற்­கேற்ப முத­லீடு செய்ய வேண்­டும்.




பொது­வாக, இளம் வய­தி­ன­ருக்கு இத்­திட்­டம் மிக­வும் ஏற்­ற­தாக கரு­தப்­ப­டு­கிறது. கார­ணம், இளம் வய­தில் சம­பங்­கில் அதிக அள­வில் முத­லீடு செய்­யும் சாத்­தி­யம் உள்­ளது. மற்­ற­வர்­கள், என்.பி.எஸ்., திட்­டத்தை மட்­டும் சார்ந்­தி­ரா­மல், ஓய்வு கால திட்­ட­மி­ட­லில் இதை ஒரு முக்­கிய அங்­க­மாக கருதி செயல்­ப­ட­லாம். ஓய்வு காலத்­திற்கு எவ்­வ­ளவு தொகை தேவைப்­படும்
என்­பதை அறிந்து அதில், என்.பி.எஸ்., எந்த அளவு பங்­க­ளிப்பு செலுத்­தும் என்­பதை உணர்ந்து செயல்­பட வேண்­டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)