பதிவு செய்த நாள்
17 ஜூலை2019
04:18
புதுடில்லி: ‘மைண்டு டிரீ நிறுவனத்தின், நீண்டகால வளர்ச்சிக்குத் தேவையான உந்துதலை வழங்குவோம்’ என, அந்நிறுவன பங்குதாரர்களுக்கு, உறுதியளித்துள்ளது, எல் அண்டு டி.,
பெங்களூருவில் நடைபெற்ற, மைண்டுடிரீ ஆண்டு கூட்டத்தில், இது குறித்து, எல் அண்டு டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான, எஸ்.என்.சுப்ரமணியன் கூறியதாவது: மைண்டு டிரீயின் நீண்டகால வளர்ச்சிக்கு, நிர்வாக குழுவின் மேற்பார்வை மற்றும் தொடர்புடைய வாடிக்கையாளர்கள் இணைப்பு ஆகியவற்றின் மூலம் உதவுவோம்.
மேலும், எல் அண்டு டி இன்ஃபோடெக், எல் அண்டு டி டெக்னாலஜி சர்வீசஸ், எல் அண்டு டி என்.எக்ஸ்.டி., ஆகியவற்றிலிருந்து வேறுபட்டதாக, மைண்டு டிரீ நிறுவனம் இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.எல் அண்டு டி சமீபத்தில், மைண்டு டிரீயின் பெரும்பான்மை பங்குகளை கையகப்படுத்தி, நிறுவனத்தை, தன் வசம் கொண்டு வந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|