பதிவு செய்த நாள்
18 ஜூலை2019
06:52
புதுடில்லி : ‘அன்னை இன்ப்ரா’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, செபி வழங்கி உள்ளது.
தண்ணீர் சம்பந்தமான உள்கட்டமைப்பு பணிகள், கட்டுமானம், வடிகால், சாலை அமைப்பு, உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வரும், அன்னை இன்ப்ரா டெவலப்பர்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி வழங்கி உள்ளது.மார்ச், 30ம் தேதியன்று, பங்கு வெளியீட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி, செபிக்கு, அன்னை இன்ப்ரா விண்ணப்பம் செய்திருந்தது.
தமிழகத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 200 – -225 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஒரு கோடி பங்குகளை வெளியிட இருக்கிறது. பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ‘பன்டோமாத் கேப்பிட்டல் அட்வைசர்ஸ்’ நிறுவனம் நிர்வகிக்கிறது.அன்னை இன்ப்ரா நிறுவனம், புதிய பங்குகளை, மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை ஆகியவற்றில் பட்டியலிட உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|