ஜூன் மாதத்தில் ஏற்றுமதி சரிவு; எட்டு மாதங்களில் முதன் முறையாக பாதிப்பு ஜூன் மாதத்தில் ஏற்றுமதி சரிவு; எட்டு மாதங்களில் முதன் முறையாக பாதிப்பு ... ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனையில் தமிழகம் நான்காம் இடம் ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனையில் தமிழகம் நான்காம் இடம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
8 சதவீத வளர்ச்சியை எட்டுவதற்கான வழி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2019
06:53

புதுடில்லி : நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, 8 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்றால், அதற்கு, வெளிநாட்டு மூலதனத்தை திரட்ட வேண்டும் என, தலைமை பொருளாதார ஆலோசகர், கே.வி.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


‘எச்.டி.எப்.சி., பேங்க் 2.0 விடியல் முதல், டிஜிட்டல் வரை’ என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய, கே.வி.சுப்ரமணியன், மேலும் கூறியதாவது:நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, 7 சதவீதத்திலிருந்து, 8 சதவீதமாக அதிகரிக்க, வெளிநாட்டு பத்திர வெளியீடுகள் போன்றவை மூலமாக மட்டுமின்றி, வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கும் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். நமக்கு முதலீடுகள் கிடைத்தால், அது, நம் உற்பத்தி திறன், ஏற்றுமதி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அதிகரிக்கும்.


இவை எல்லாம் அதிகரிக்கும் போது, முதலீடுகள் மேலும் அதிகரிக்கும். இந்த சுழற்சி மிகவும் முக்கியமானது.தற்போது, நம் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை, 7 சதவீதத்துக்கு அருகில் இருக்கிறோம். இதை, 8 சதவீதமாக அதிகரிக்க, மேற்சொன்ன சுழற்சி மிகவும் தேவை. அதை நாம் துாண்ட வேண்டும். அதற்காக, வெளிநாட்டு முதலீடுகள் நமக்கு தேவைப்படுகின்றன. நாம் அதை ஊக்குவிக்க வேண்டும். இந்திய பொருளாதாரமானது, 55 ஆண்டுகளில், 1 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உருவெடுத்தது.

மேலும், கூடுதலாக, 1 லட்சம் கோடி டாலர், கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்து, மார்ச், 2019ல் அது, 2.75 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உயர்ந்தது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)