பதிவு செய்த நாள்
18 ஜூலை2019
06:53
புதுடில்லி : நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, 8 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்றால், அதற்கு, வெளிநாட்டு மூலதனத்தை திரட்ட வேண்டும் என, தலைமை பொருளாதார ஆலோசகர், கே.வி.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
‘எச்.டி.எப்.சி., பேங்க் 2.0 விடியல் முதல், டிஜிட்டல் வரை’ என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய, கே.வி.சுப்ரமணியன், மேலும் கூறியதாவது:நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, 7 சதவீதத்திலிருந்து, 8 சதவீதமாக அதிகரிக்க, வெளிநாட்டு பத்திர வெளியீடுகள் போன்றவை மூலமாக மட்டுமின்றி, வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கும் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். நமக்கு முதலீடுகள் கிடைத்தால், அது, நம் உற்பத்தி திறன், ஏற்றுமதி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அதிகரிக்கும்.
இவை எல்லாம் அதிகரிக்கும் போது, முதலீடுகள் மேலும் அதிகரிக்கும். இந்த சுழற்சி மிகவும் முக்கியமானது.தற்போது, நம் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை, 7 சதவீதத்துக்கு அருகில் இருக்கிறோம். இதை, 8 சதவீதமாக அதிகரிக்க, மேற்சொன்ன சுழற்சி மிகவும் தேவை. அதை நாம் துாண்ட வேண்டும். அதற்காக, வெளிநாட்டு முதலீடுகள் நமக்கு தேவைப்படுகின்றன. நாம் அதை ஊக்குவிக்க வேண்டும். இந்திய பொருளாதாரமானது, 55 ஆண்டுகளில், 1 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உருவெடுத்தது.
மேலும், கூடுதலாக, 1 லட்சம் கோடி டாலர், கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்து, மார்ச், 2019ல் அது, 2.75 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உயர்ந்தது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|