ஜூன் மாதத்தில் ஏற்றுமதி சரிவு; எட்டு மாதங்களில் முதன் முறையாக பாதிப்பு ஜூன் மாதத்தில் ஏற்றுமதி சரிவு; எட்டு மாதங்களில் முதன் முறையாக பாதிப்பு ... ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனையில் தமிழகம் நான்காம் இடம் ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனையில் தமிழகம் நான்காம் இடம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பிமல் ஜலான் கமிட்டி அறிக்கை தயார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2019
06:56

துடில்லி : ரிசர்வ் வங்கி, உபரி நிதியாக எவ்வளவு இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்பதுதொடர்பான அறிக்கையை, பிமல் ஜலான் கமிட்டி, இறுதி செய்துள்ளது.ரிசர்வ் வங்கியில், உபரி நிதியாக எவ்வளவு இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து முடிவு செய்வதற்காக, ரிசர்வ் வங்கியின், முன்னாள் கவர்னர், பிமல் ஜலான் தலைமையில், ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.


நேற்று, இந்த கமிட்டி, தன் அறிக்கையை இறுதி செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.ஆறு பேர்களை உறுப்பினர்களாக கொண்ட, பிமல் ஜலான் கமிட்டி, கடந்த ஆண்டு, டிசம்பர் 26ல், அமைக்கப்பட்டது.பிற நாடுகளில் மத்திய வங்கிகள் வைத்திருக்கும் உபரி நிதியோடு ஒப்பிட்டு, இந்திய ரிசர்வ் வங்கி, உபரி நிதி இருப்பாக எவ்வளவு வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்தும், அதிக இருப்பை மத்திய அரசுக்கு வழங்குவது குறித்தும் ஆராய, இந்த கமிட்டி அமைக்கப்பட்டது.ரிசர்வ் வங்கி வசம், தற்போது உபரி நிதியாக, 9 லட்சம் கோடி ரூபாய் உள்ளதாக தெரிகிறது.


இந்நிலையில், பிமல் ஜலான் கமிட்டி, தன் அறிக்கையை நேற்று நடைபெற்ற கூட்டத்துடன் இறுதி செய்து விட்டதாக தெரிகிறது. நேற்று நடைபெற்ற கூட்டமே, இந்த கமிட்டி கூடும் இறுதிக் கூட்டம் எனவும் கருதப்படுகிறது. கமிட்டி அறிக்கையின் படி, மத்திய அரசுக்கு, ரிசர்வ் வங்கி, எவ்வளவு நிதி வழங்கும் என்பது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கமிட்டி இறுதி செய்த முடிவு குறித்து, இப்போது வெளியே தெரிவிக்க முடியாது. இருப்பினும், 3 முதல், 5 ஆண்டுகளுக்குள்ளாக, குறிப்பிட்ட கால இடைவெளிகளில், உபரி நிதியானது, மத்திய அரசுக்கு வழங்கப்படும் என்று மட்டும் சொல்ல முடியும்.ரிசர்வ் வங்கி வழங்கும், உபரி நிதியை கொண்டு, மத்திய அரசு நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க முடியும். நிதிப் பாற்றாக்குறை குறித்த அதன் இலக்கை, இந்த நிதி உதவியுடன் எட்ட முடியும்.


நடப்பு நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறை இலக்கு, பிப்ரவரி மாதத்தில், வெளியிடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், 3.4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இது பின்னர், 3.3 சதவீதமாக குறைக்கப்பட்டது.மேலும், மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், ரிசர்வ் வங்கியிடமிருந்து, டிவிடெண்டாக, 90 ஆயிரம் கோடி ரூபாயை எதிர்பார்த்தது. இதற்கு முந்தைய நிதியாண்டில், இது, 68 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.கமிட்டி, 90 நாட்களில், ரிசர்வ் வங்கியிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கமிட்டியின் முதல் கூட்டம், ஜனவரி 8ம் தேதியன்று நடைபெற்றது.


இதன் பிறகு, மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.தற்போது, அறிக்கை இறுதி செய்யப்பட்டுவிட்டது. இருப்பினும், எடிட் செய்ய வேண்டிய பணிகள் முடிவுற்ற பிறகு, ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்கப்படும் நாள் அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார். முரண்பாடுரிசர்வ் வங்கியிடம், உபரி நிதி இருப்பு எவ்வளவு இருக்கலாம் என்பதில், மத்திய அரசுடன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் படேல் முரண்பட்டார்.பல நாடுகளில், மத்திய வங்கிகள், மொத்த சொத்தில், 14 சதவீதத்தை மட்டுமே, உபரி இருப்பாக வைத்திருக்கின்றன.


இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி, 28 சதவீதம் வைத்திருப்பது அதிகம் என மத்திய அரசு கருதியது. இதையடுத்தே, பிமல் ஜலான் கமிட்டி அமைக்கப்பட்டது.இதற்கு முன்பு, இதே காரணத்துக்காக, மூன்று கமிட்டிகள் அமைக்கப்பட்டன. 1997ல், வி.சுப்ரமணியன் தலைமையில் ஒரு கமிட்டியும், 2004ல், உஷா தோரட் தலைமையில் ஒரு கமிட்டியும், 2013ல், ஒய்.எச்.மாலேகம் தலைமையில் ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)