பதிவு செய்த நாள்
19 ஜூலை2019
04:52
சென்னை: இந்தியாவில், ‘டிஜிட்டல்’ பணப் பரிவர்த்தனையில், தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளதாக, ‘ரேஸர் பே’ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ரேஸர் பே என்ற ஒருங்கிணைந்த பணப் பட்டுவாடா தீர்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில் நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகளில், தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் கர்நாடகா உள்ளது. இரண்டு மற்றும் மூன்றில், முறையே, மஹாராஷ்டிரா, டில்லியும்; ஐந்தாவது இடத்தில், ஆந்திராவும் உள்ளன.
நகரங்களில் நடைபெற்ற பணப் பரிவர்த்தனையில், சென்னை ஆறாவது இடத்தில் உள்ளது. தற்போது, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கான சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், மொபைல் போன் வாயிலாக செய்யும் பரிவர்த்தனை, 2021ல், 10 மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|