ஆடை ஏற்றுமதி 7 சதவீதம் உயர்வு ஆடை ஏற்றுமதி 7 சதவீதம் உயர்வு ...  சரிவடைந்த பங்குச் சந்தைகள்; சென்செக்ஸ் 560 புள்ளிகளை இழந்தது சரிவடைந்த பங்குச் சந்தைகள்; சென்செக்ஸ் 560 புள்ளிகளை இழந்தது ...
‘ரிலையன்ஸ் ஜியோ’வுக்கு அதிகரித்த வாடிக்கையாளர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2019
06:33

புதுடில்லி: நாட்டில், அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட, தொலை தொடர்பு நிறுவனங்களில், இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது, ‘ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம்’ நிறுவனம்.

இதுவரை, அதிக வாடிக்கையாளர்களுடன், முதல் இடத்தில், ‘வீடியோகான் நிறுவனமும், இரண்டாவது இடத்தில், ‘பார்தி ஏர்டெல்’லும், மூன்றாவது இடத்தில் ரிலையன்ஸ் ஜியோவும் இருந்தன. இந்நிலையில், தற்போது பார்தி ஏர்டெல் நிறுவனத்தை, மூன்றாவது இடத்திற்கு தள்ளி, இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். வீடியோகான் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, ‘டிராய்’ மே மாத நிலவரம் குறித்து வெளியிட்டுள்ள தரவுகளிலிருந்து, இது தெரிய வந்துள்ளது. மே மாத இறுதி நிலவரப்படி, ‘வோடபோன் ஐடியா’ நிறுவனம், 38.76 கோடி வாடிக்கையாளர்களுடன், முதல் இடத்தில் உள்ளது. ஜியோ, 32.30 கோடி வாடிக்கையாளர்களுடன், இரண்டாவது இடத்திலும், பார்தி ஏர்டெல், 32.04 கோடி வாடிக்கையாளர்களுடன், மூன்றாவது இடத்திலும் உள்ளன.

கடந்த, 2016 செப்டம்பரில், ஜியோ நிறுவனம், குறைவான கட்டண விகிதங்களுடன், சந்தையில் நுழைந்தது. இதன் காரணமாக, மற்ற போட்டி நிறுவனங்கள், கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்தன. அவை, ஒன்று, வணிகத்தை மூடிவிட்டு செல்ல வேண்டும் அல்லது பிற நிறுவனத்துடன் இணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின. சில நிறுவனங்கள் கடையை மூடின. சில நிறுவனங்கள், கூட்டு வைத்துக் கொண்டன.

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த, கடந்த நிதியாண்டின், நான்காவது காலாண்டில், 30.6 கோடி வாடிக்கையாளர்கள், ஜியோ நிறுவனத்துக்கு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த, முதல் காலாண்டில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம், 45.6 சதவீதம் அதிகரித்து, 891 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)