வழி தவறிய வங்கி தேசியமயம்!வழி தவறிய வங்கி தேசியமயம்! ...  அதிகரிக்கும் இணைய பயன்பாடு வேகமெடுக்கும், ‘டிஜிட்டல்’ ஊடகம் அதிகரிக்கும் இணைய பயன்பாடு வேகமெடுக்கும், ‘டிஜிட்டல்’ ஊடகம் ...
மாறும் சூழலும் நம் மனநிலையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
07:09

கவலைப்படும் நேரத்தில், என்ன செய்வது என்று அறியாது தவிப்பது நமது இயல்பு. கவலை, அத்தகைய மனநிலைக்கு நம்மை தள்ளி விடும். அந்த நேரத்தில், நாம் தனிமையில் இருப்பதாலும், நம்முடைய கவலைகள் மேலும் அதிகரிக்கும்.

வெற்றிகளை சந்திக்கும் நேரத்தில், பலரோடு விரும்பி உறவாடும் வழக்கம் கொண்டவர்களும், கவலையில் மூழ்கும் போது, தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது வழக்கம். இதுவும், நம் கவலைகளை மேலும் அதிகரிக்கும்.மாறும் சூழல்களில், நம்முடைய மனநிலையை எப்படி கையாள்கிறோம் என்பதே முதலீட்டு வெற்றி, -தோல்விக்கு முக்கிய காரணம். தற்போதைய சூழலுக்கு ஏற்ப, நம்மை வழி நடத்திச் செல்ல, நம்மை உடனடியாக தயார்படுத்திக் கொள்வோம்.


சூழல்கள் மாறுவது என்பது, பொருளாதாரத்தில் மிகச் சாதாரணமாக நடக்கும். பலருக்கு, சாதக சூழலை சந்திப்பதில் காட்டும் முதலீட்டு ஆர்வம், பாதக சூழலில் காணாமல் போய் விடும். எல்லா சூழல்களையும் சந்திக்கத் தயாராக இருப்பது, அனைத்து முதலீட்டாளர்களின் அடிப்படைத் தேவை.இன்னும் சொல்லப் போனால், பாதக சூழலை, அதிக திடத்தோடும் ஆர்வத்தோடும் சந்திக்கும் முதலீட்டாளர்களே, நாம் சந்தையில் மதிக்கும் வெற்றி பெரும் ஆளுமைகளாக இருக்கிறார்கள்.


ஒரு சாதாரண முதலீட்டாளராக இருப்பவரும், ஆளுமையாக தன்னை உருவாக்கி கொள்ளும் வாய்ப்புகள், சந்தை சரிவை சந்திக்கும்போது மட்டுமே ஏற்படுகின்றன. அத்தகைய வாய்ப்புகளை, நமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் வழிகளைப் பற்றி, இந்த நேரத்தில் பேசுவோம். இனிவரும் காலங்களில், அத்தகைய வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும்போது, அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள நம்மைத் தயார் படுத்திக்கொள்வோம்.பங்குச் சந்தையில், தொடர் சரிவு ஏற்படும் நேரத்தில், அடுத்து என்ன செய்வது என்ற கவலை கூடிக்கொண்டே இருக்கும். அத்தகைய கவலைகளை சந்திக்கும் விதம் மட்டுமே, ஒருவரை முதலீட்டு வெற்றியை நோக்கி நகர்த்திச் செல்லும்.


நாம் மற்றவர்களைப் போலவே, சந்தையின் அச்சங்களை, நம் முதலீட்டு முடிவுகளில் பிரதிபலித்தால், நம்மால் வருங்காலத்திற்கு தேவையான எந்த முக்கிய முடிவையும் எடுக்க முடியாது.நிகழ்கால கவலைகளைக் கடந்து, வருங்காலத்தில் அந்த கவலைகளுக்கு எப்படி தீர்வை அடைய முடியும் என்ற தேடலில் இறங்குவதே, இப்போதைய முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.அந்த குறிக்கோள் நிறைவேறத் தேவையான, எல்லா தேடல்களிலும், முயற்சிகளிலும் இப்போது ஈடுபடுவதே, முதலீட்டாளர்களுக்கு நெடுங்கால நன்மையை ஏற்படுத்தும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)