மாறும் சூழலும்  நம் மனநிலையும்மாறும் சூழலும் நம் மனநிலையும் ...  சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மின் உற்பத்தியில் சாதனை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மின் உற்பத்தியில் சாதனை ...
அதிகரிக்கும் இணைய பயன்பாடு வேகமெடுக்கும், ‘டிஜிட்டல்’ ஊடகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2019
07:06

மும்பை : ‘டிஜிட்டல்’ ஊடகத் துறை, 2021ல், 35 ஆயிரம் கோடி ரூபாய் சந்தையாக உருவெடுக்கும் என, பிக்கி – -இ.ஒய்., நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.


இது குறித்து, இந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டில், ‘இன்டர்நெட்’ எனும், இணையத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை, வேகமாக அதிகரித்து வருவதால், டிஜிட்டல் ஊடகத் துறை, விரைவான வளர்ச்சியை கண்டு வருகிறது.இதையடுத்து, இத்துறையானது, நடப்பு ஆண்டிலேயே, சினிமா துறையை பின்னுக்குத் தள்ளிவிடும்.டிஜிட்டல் ஊடகத் துறையானது, 2021ல், 35 ஆயிரத்து, 190 கோடி ரூபாய் மதிப்புள்ள துறை என்ற நிலையை எட்டிவிடும்.


சினிமா துறையின் மதிப்பு, கடந்த ஆண்டில், 17 ஆயிரத்து, 250 கோடி ரூபாயாக இருந்தது. 2019ல் இத்துறையானது, 19 ஆயிரத்து, 320 கோடி ரூபாய் சந்தையாக இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.அச்சு ஊடகத்தைப் பொறுத்தவரை, அதன் மதிப்பு, கடந்த ஆண்டில், 30 ஆயிரத்து, 360 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டது. 2021ல், இத்துறை மதிப்பு, 33 ஆயிரத்து, 120 கோடி ரூபாயாக இருக்கும் என, கணிக்கப்பட்டுஉள்ளது.கடந்த ஆண்டில், டிஜிட்டல் ஊடகத்தின் மதிப்பு, 42 சதவீத வளர்ச்சியை அடைந்து, 16 ஆயிரத்து, 560 கோடி ரூபாயாக இருந்தது.


இந்த வளர்ச்சி வேகத்துக்கு முக்கியமான காரணம், நாட்டில், மொபைல் போன் வைத்திருப்பவர்கள், அதை பயன்படுத்தும் மொத்த நேரத்தில், 30 சதவீதத்தை, பொழுதுபோக்குகளில் செலவழிக்கின்றனர் என்பது தான்.இதன் அடிப்படையில், டிஜிட்டல் ஊடகம், 2019ல், 22 ஆயிரத்து, 80 கோடி ரூபாய் மதிப்பு உள்ளதாக வளர்ச்சியுறும் என, கணிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில், 32.50 கோடி பேர், ‘வீடியோ’ பார்வையாளர்களாகவும், 15 கோடி பேர், ‘ஆடியோ’ சேவையை பயன்படுத்துபவர்களாகவும் இருந்துஉள்ளனர்.


வரும், 2021ல், பணம் செலுத்தி, வீடியோ சேவையை பெறுபவர்கள் எண்ணிக்கை, மூன்று கோடியிலிருந்து, 3.5 கோடியாக இருக்கும். ஆடியோவை பொறுத்தவரை, 60 லட்சத்திலிருந்து 70 லட்சம் பேர், பணம் செலுத்தி சேவை பெறுபவர்களாக இருப்பர்.இவ்வாறு, அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)