பதிவு செய்த நாள்
24 ஜூலை2019
07:09
சென்னை : சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத மின் உற்பத்தியில், இந்தியா பெரிய அளவில் சாதனை படைத்துள்ளது,’’ என, உத்தர பிரதேச மாநில, மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர், ராஜ்பிரதாப் சிங் பேசினார்.
இந்திய தொழில் துறை கூட்டமைப்பு சார்பில், மின் உற்பத்தி தொடர்பான, ‘கிரீன் பவர் –- 2019’ என்ற தலைப்பிலான, இரண்டு நாள் கருத்தரங்கம், நேற்று சென்னையில் துவங்கியது. கருத்தரங்கை துவக்கி வைத்து, உத்தர பிரதேச மாநில, மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர், ராஜ்பிரதாப் சிங் பேசியதாவது:சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத, மின் உற்பத்தி செய்வதில், இந்தியா பெரிய அளவில் சாதனை படைத்து வருகிறது.மின்சார பயன்பாடு தவிர்க்க முடியாததாக மாறிவிட்டதால், கிராமங்களில், மின்சாரம் இல்லாத வீடுகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து விட்டது.
அதேபோல், மின் சாதன பொருட்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.சூரிய ஒளி மின்சாரத்தை சேமித்து வைக்க, அதிக திறன் உடைய, பேட்டரிகள் தற்போது கிடைக்கின்றன. சூரிய ஒளி மூலமான மின்சாரப் பயன்பாட்டை ஊக்குவிக்க, மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது. இதை முறையாகப் பயன்படுத்தினால், மின்சார உற்பத்தி செலவு குறையும்.இவ்வாறு, அவர் பேசினார். இந்த கருத்தரங்கில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, மின்சார உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|