‘பேமென்ட் பேங்க்’ தேவை அரசு ஆதரவு ‘பேமென்ட் பேங்க்’ தேவை அரசு ஆதரவு ... பட்டு நுால் இறக்குமதி சீனாவிலிருந்து அதிகரிப்பு பட்டு நுால் இறக்குமதி சீனாவிலிருந்து அதிகரிப்பு ...
‘எல் அண்டு டி’ நிகர லாபம் 22% அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2019
05:11

புதுடில்லி : நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ‘எல் அண்டு டி’ நிறுவனத்தின் நிகர லாபம், 22 சதவீதமாக அதிகரித்து, 1,472 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், நிகர லாபம், 1,215 கோடி ரூபாயாக இருந்தது.

இது குறித்து, இந்நிறுவனத்தின், தலைமை நிதி அதிகாரி, ஆர்.சங்கர் ராமன் மேலும் கூறியதாவது: நிறுவனத்தின் வருவாய், 9.74 சதவீதம் அதிகரித்து, 29 ஆயிரத்து, 636 கோடி ரூபாயாகியுள்ளது. இதுவே, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 27 ஆயிரத்து, 5 கோடியாக இருந்தது. சர்வதேச வருவாய், 31 சதவீதம் அதிகரித்து, 9 ஆயிரத்து, 268 கோடி ரூபாயாக உள்ளது. மதிப்பீட்டு காலத்தில், 38 ஆயிரத்து, 700 கோடி ரூபாய் மதிப்பிலான, புதிய, ‘ஆர்டர்’களை நிறுவனம் பெற்றுள்ளது.

இது, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடும் போது, 11 சதவீத வளர்ச்சி. மொத்த ஆர்டர்களில், வெளிநாட்டு ஆர்டர்களின் பங்கு, 23 சதவீதம்.‘மைண்டுடிரீ’ நிறுவனத்தை பொறுத்தவரை, ஜூன் மாத முடிவில், 28.86 சதவீத பங்குகளை வாங்கியிருந்தோம். தற்போது, 60.59 சதவீதமாக அதிகரித்துள்ளது.இரண்டாவது காலாண்டில் தான், இந்நிறுவனத்தின் நிதி நிலையை, எங்கள் துணை நிறுவனங்களோடு சேர்த்து பார்க்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மைண்டுடிரீ நிறுவனத்தின், தலைமை பொறுப்புகளில் நபர்களை அமர்த்துவது குறித்து, தலைமை செயல் அதிகாரி, எஸ்.என்.சுப்ரமணியன் கூறியதாவது: மைண்டுடிரீ நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆகியோர் பதவி விலகியுள்ள நிலையில், அப்பதவிக்கு, புதிய நபர்களை தேர்ந்தெடுத்து, விரைவில் அறிவிப்போம். இவ்வாறு, அவர் கூறினார். சமீபத்தில், மைண்டுடிரீ நிறுவனத்தின் செயல்சாரா தலைவராக, ஏ.எம்.நாயக் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)