பட்டு நுால் இறக்குமதி சீனாவிலிருந்து அதிகரிப்புபட்டு நுால் இறக்குமதி சீனாவிலிருந்து அதிகரிப்பு ...  வாடிக்கையாளர் சேவையில் ‘டி.வி.எஸ்., மோட்டார்’ முதலிடம் வாடிக்கையாளர் சேவையில் ‘டி.வி.எஸ்., மோட்டார்’ முதலிடம் ...
ஆறு மாதங்களில் அதிக வேலைவாய்ப்பு; அனுபவசாலிகளுக்கு பிரகாசமான எதிர்காலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2019
05:16

புதுடில்லி: ‘அடுத்த ஆறு மாதங்களில், வேலைவாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்’ என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

நாட்டின் முன்னணி வேலைவாய்ப்பு இணையதள நிறுவனமான, ‘நோக்ரி டாட் காம்’ ஜூலை முதல், வரும் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், வேலைவாய்ப்புகள் குறித்து, ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. 15 துறைகளில், வேலைவாய்ப்புகளை வழங்கும் 2,700 பேரிடம், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நிறுவனங்களில், பணியில் அமர்த்தப்படுவோர் எண்ணிக்கை, ஜூலை முதல், டிசம்பர் வரையிலான அரையாண்டு காலகட்டத்தில் அதிகரிக்கும். குறிப்பாக, மூன்று முதல், ஐந்து ஆண்டுகள் அனுபவம் உடையவர்களுக்கு, அதிகளவிலான வேலைவாய்ப்புகள் ஏற்படும்.புதிய வேலைகள் உருவாகுவது மகிழ்ச்சி தரும் செய்தி தான் என்றாலும், சரியான திறமைசாலிகளை அடையாளம் காண்பதில் உள்ள சிக்கல்கள் தொடரவே செய்கின்றன.

வேலைவாய்ப்புகளை வழங்குபவர்களில், 41 சதவீதம் பேர், அடுத்த ஆறு மாதங்களில், திறமையானவர்கள் பற்றாக்குறை இன்னும் அதிகரிக்கும் என, தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், 50 சதவீதம் பேர், இதே கருத்தை தெரிவித்திருந்தனர்.ப ணியமர்த்துபவர்களில், 16 சதவீதம் பேர், இந்த ஆறு மாதங்களில், காலியாக இருக்கும் இடங்களுக்கு மட்டுமே, பணியில் அமர்த்தப்படுவர் என, தெரிவித்துள்ளனர்.

புதிதாக யாரும் பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள் என, 5 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர். ஒரு சதவீதம் பேர், மதிப்பீட்டு காலத்தில், பணிநீக்கமே இருக்கும் என, எதிர்பார்க்கின்றனர். ஒட்டு மொத்தத்தில், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை, தகவல் தொழில்நுட்பம், பி.பி.ஓ., வங்கி, நிதிச் சேவை, காப்பீடு ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களே தெரிவித்து உள்ளனர். இத்துறைகளைச் சேர்ந்தவர்களில், 80 முதல், 85 சதவீதம் பேர், புதிய வேலைகள் உருவாகும் என, குறிப்பிட்டுள்ளனர்.

அனுபவ அடிப்படையிலான வேலைவாய்ப்பில், மூன்று முதல் ஐந்து ஆண்டு அனுபவம் கொண்டவர்களுக்கு, அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இவர்களை அடுத்து, ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் அனுபவம் உடையவர்களுக்கு, வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் ஆய்வில் தெரிய வந்து உள்ளது.மொத்த வேலைவாய்ப்பில், 18 சதவீதம், எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் தேவைப்படும் உயர் பதவிகளுக்கானதாக இருக்கும் என, தெரிய வந்துள்ளது.

வாகனத் துறை, 12 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர்களை பணிக்கு எடுப்பதில் தான் ஆர்வமாக இருக்கிறது.நல்ல ஊதியம், நல்ல பதவி, எதிர்கால வளர்ச்சி ஆகியவை காரணமாகவே, பெரும்பாலானோர் வேறு இடங்களை நோக்கி செல்கின்றனர் என, அதிகமானோர் கருதுகின்றனர்.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)