பதிவு செய்த நாள்
26 ஜூலை2019
06:57
புதுடில்லி: நேற்று நடைபெறுவதாக இருந்த, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், நாள் குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெறுவதாக இருந்த கூட்டத்தில், மின் வாகனங்களுக்கான வரியைக் குறைப்பது குறித்து முடிவு எடுக்கப்படுவதாக இருந்தது.ஆனால், நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், பார்லிமென்ட் கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. நேற்று நடைபெறுவதாக இருந்த, 36வது கூட்டத்தில், மின் வாகனங்களுக்கான வரியை, 12 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக குறைப்பது குறித்து முடிவு எடுக்கப்பட இருந்தது. இந்த ஒரு விஷயம் குறித்து மட்டுமே கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.
அடுத்து கூட்டம் எப்போது நடைபெறும் என்பது குறித்து, பின்னர் அறிவிக்கப்படும். அடுத்து நடக்கவிருக்கும் கூட்டத்தின் போது, மேலும் சில விஷயங்கள் குறித்தும் ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, நிதித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|