ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் திடீர் ரத்து ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் திடீர் ரத்து ... தொடர் சரிவில் பங்குச் சந்தைகள் தொடர் சரிவில் பங்குச் சந்தைகள் ...
இடம் மாற்றப்பட்டதால் நிதித்துறை செயலர் ராஜினாமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2019
07:00

புதுடில்லி: மத்திய நிதித் துறை செயலராக இருந்த, சுபாஷ் சந்திர கார்க், கடந்த புதன் கிழமை, எரிசக்தி துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அடுத்த நாளே, அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற, கார்க் அனுமதி கோரி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

இடமாற்றலில் அதிருப்தி அடைந்தே, அவர் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அரசின் முடிவு தெரியும் வரை, புதிய பொறுப்பை ஏற்று, பணியில் தொடர்வார் என்கின்றனர்.

இது குறித்து, சில உயரதிகாரிகள் கூறியதாவது: இதுவரை இருந்த பொருளாதாரத் துறை செயலர்களில், மிகவும் சக்தி வாய்ந்தவராக கார்க் சமீபத்தில் காணப்பட்டார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதியவர் என்ற நிலையில், நிதித் துறையின் பல முடிவுகளுக்கு, கார்க் காரணமாக இருந்தார். குறிப்பாக, வெளிநாட்டில் அரசு கடன் பத்திரங்கள் வெளியிடுவது, நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாகக் குறைத்தல் மற்றும் அந்த இலக்கை அடைய, பட்ஜெட்டுக்கு வெளியே கடன் வாங்குவது போன்ற பல விஷயங்களில், அவர் தன்னை முன் நிறுத்தினார்.

ஆனால், இந்த விஷயங்கள், நிதியமைச்சகத்துக்கு பெரிய எதிர்ப்புகளை உருவாக்கின. பல பொருளாதார அறிஞர்கள், இந்த முடிவுகள் குறித்து கடுமையாக விமர்சித்தனர். இது ஒருபுறமிருக்க, ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த, உர்ஜித் படேல், செபி அதிகாரிகள் என, பலருடன் அவர் முரண்பட்டு வந்தார். அடுத்து, பிமல் ஜலான் கமிட்டி குழுவுடனும் முரண்பட்டுள்ளார். கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்ளாதது; தன் கருத்தை கடைசி வரை மாற்றிக் கொள்ள மறுத்தது என, பல விதங்களில், எதிர்நிலையில் இருந்தார். இந்நிலையில் தான், அவர், ‘சக்தி’ வாய்ந்த துறையிலிருந்து மாற்றப்பட்டார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சுபாஷ் சந்திர கார்கின் இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள, அதானு சக்ரவர்த்தி, பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநில முதல்வராக பணியாற்றிய காலத்தில், அவருடன் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)