பதிவு செய்த நாள்
30 ஜூலை2019
06:58
புதுடில்லி: நடப்பாண்டில், ஏப்ரல் முதல், ஜூன் வரையிலான, முதல் காலாண்டில், ஒன்பது நகரங்களில், வீடுகள் விற்பனை, 6 சதவீதம் அதிகரித்துள்ளது.
சென்னை, மும்பை, கோல்கட்டா, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட, ஒன்பது முக்கிய நகரங்களில், தரவுகள் பகுப்பாய்வு நிறுவனமான, ‘பிராப்ஈக்யுட்டி’ நிறுவனம், ஆய்வை மேற்கொண்டது.
இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், வீடுகள் விற்பனை, 6 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம், 61 ஆயிரத்து, 789 வீடுகள், இக்காலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில், இதே காலத்தில், 58 ஆயிரத்து, 292 வீடுகளே விற்பனை ஆகியிருந்தன.இருப்பினும், புதிய அறிமுகங்கள், மதிப்பீட்டு காலத்தில், 11 சதவீதம் சரிவு அடைந்துள்ளன. கடந்த ஆண்டில், 57 ஆயிரத்து, 425 வீடுகள் என்று இருந்தது, 51 ஆயிரத்து, 108 வீடுகளாக குறைந்து விட்டன.விற்பனை வளர்ச்சி மற்றும் புதிய அறிமுகங்களில் சரிவு ஆகியவை காரணமாக, விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை, 11 சதவீதம் சரிவை சந்தித்து, 5.90 லட்சமாக உள்ளது.
ரியல் எஸ்டேட் சந்தையில், ‘ரெடி’யாக இருக்கும் திட்டங்கள் மற்றும் புதிய அறிமுகங்கள் ஆகியவற்றில், தற்போது விற்பனை நன்றாக இருக்கிறது. சென்னையைப் பொருத்தவரை, விற்பனை, 15 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|